தருமபுரி, அக்.16- நியாயமான முறையில் போராடிய வர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வலியுறுத்தி நவ.1 ஆம் தேதியன்று தருமபுரி மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் குடியேறும் போராட் டம் நடைபெற உள்ளதென தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நல சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மாற்றுத்திறனாளி கள் சங்கத்தின் தருமபுரி மாவட்ட செய லாளர் எம்.மாரிமுத்து விடுத்துள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான நலசங்கத்தின் சார்பில் கடந்த ஜூலை 5 ஆம் தேதியன்று குடி யேறும் போராட்டம் நடைபெற்றது. இப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல் துறையினர், பேச்சுவார்த்தைக் கூட நடத்தாமல் சங்கத்தின் தலை வர்களை அடாவடியாக கைது செய்த னர். மேலும், போராட்டத்தை கலைக்க முயன்றனர். இதில், மாற்றுத்திறனாளி கள் கலைந்து செல்லாமல் போராடியதின் விளைவாக 500 பேரை போலீசார் கைது ெய்து, தனியார் மண்டபத்தில் சிறைப் படுத்தினர். இதைத்தொடர்ந்து மாலை யில் கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். இதனால் ஆவேசம டைந்த மாற்றுத்திறனாளிகள் கோரிக் கையை நிறைவேற்றாமல் கலைந்து செல்லமாட்டோம் எனக்கூறி உள்ளி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சங்க தலைவர் களை மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த் தைக்கு அழைத்தது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதில், மாற் றுத்திறனாளிகளுக்கு இரண்டு மாதத் திற்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையிலும் மாதம் ஒரு முறை குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும். மாற்றுத்திறனாளிக ளுக்கு நூறு நாள் வேலை வழங்கி, கிராம நிர்வாக அலுவலர் தலைமை யில் ஒன்றிய அளவில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும். மாற்றுத்திற னாளிகள் அலுவலகத்தில் இடைத்தர கர்கள் மூலம் நலத்திட்டங்களை வழங் குவது தடுத்து நிறுத்தப்படும். மாற்றுத் திறனாளிகளின் நியாயமான கோரிக் கைகளுக்காக போராடியவர்களை அடா வடியாக கைது செய்து காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள் ளிட்ட 27 கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். அதன் அடிப்படையில் மாற்றுத்திற னாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஆனால், மறுநாள் போராடிய மாற்றுத்திறனாளிகள் சங்க மாநிலத் தலைவர்கள் உள்ளிட்ட 15 பேர் மீது காவல்துறை வழக்கு தொடுத்துள் ளது. நியாயமான முறையில் போராடி யவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் தலை மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை யில் கொடுத்த வாக்குறுதியையும் மீறி காவல்துறை வழக்கு பதிவு செய்தது கண்டிக்கத்தக்கது. எனவே, போடப் பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண் டும். மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்ற வேண்டும் என வலியுறுத்தி நவ.1 ஆம் தேதியன்று தருமபுரி மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.