திருப்பூர், ஏப்.13- திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரியை உயர்த்தும் தீர்மானம் எதிர்க் கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி மாமன்ற அவசரக் கூட்டம் செவ்வாயன்று மாலை 4 மணியளவில் நடைபெற் றது. மேயர் ந.தினேஷ்குமார் மாநக ராட்சியில் சொத்து வரியை உயர்த்தும் தீர்மானத்தை முன்மொழிந்தார். உள் ளாட்சி அமைப்புகளுக்கு 15ஆவது மத் திய நிதி ஆணைய மானியம் பெறுவ தற்கு சொத்து வரியை உயர்த்த வேண் டும் என சொல்லி இருக்கிறது. மேலும் மாநகராட்சியின் அதிகரித்த நிதித் தேவை, வளர்ச்சிக்குத் தேவைப்படும் நிதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சொத்து வரியை உயர்த்த பரிந்துரைத்தார். இதையடுத்து அதிமுக குழுத் தலைவர் அன்பகம் திருப்பதி பேசுகை யில், ஏற்கனவே உள்ள வரியை சீராய்வு செய்து, அனைத்து கட்சிகள், தொழில் கூட்டமைப்புகளுடன் கலந் தாலோசனை செய்து அதன் பிறகு முடிவு செய்யலாம் என்றார்.
சிபிஎம் கவுன்சிலர் கடிதம்
மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் ஆர்.மணிமேகலை சொத்து வரி உயர்வு குறித்து மேயர் தினேஷ்குமாருக்கு அளித்த கடிதத் தில், இந்த தீர்மானத்தை திரும்பப் பெற்று மக்களின் சுமைகளைக் குறைக்க வேண்டும். உள்ளாட்சிகளில் ஒன்றிய அரசு திட்டங்களுக்கு நிதி பெற சொத்து வரியை உயர்த்த வேண்டும் என ஒன்றிய அரசு கூறியி ருப்பது அநியாயமானது. மாநில, உள் ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தில் தலையிடுவதுமாகும். இதை வன்மை யாக கண்டிக்கிறோம். மேலும் வரி உயர்வு அதிகாரம் உள்ளாட்சியில் புதி தாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதி நிதிகளுக்கு உரியது. ஆனால் மாநில அரசே சொத்து வரியை உயர்த்தி அர சாணை வெளியிட்டு மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றச் சொல்வது கண்துடைப்பு ஆகும். கொரோனா பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி மற்றும் பனி யன் உள்ளிட்ட ஜவுளித் தொழில் நூல் விலை உயர்வால் கடும் பாதிப்பு, தொழிலாளர் வேலை வாய்ப்பு, வருமா னம் சுருங்கி உள்ளது. இத்துடன் ஒன் றிய அரசு தொடர்ந்து எரிபொருட்கள் விலையை கடுமையாக உயர்த்தி உள் ளது. எனவே சொத்து வரியை உயர்த்த நிர்பந்திக்கும் ஒன்றிய அரசைக் கண் டித்து மாநகராட்சியில் தீர்மானம் நிறை வேற்ற வேண்டும். ஆண்டுக்கு 6 சத விகிதம் வரியை உயர்த்தலாம் எனப தையும் கைவிட்டு, தற்போது சொத்து வரி உயர்வு குறித்த தீர்மானத்தை திரும்பப் பெற வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலி யுறுத்துவதாக ஆர்.மணிமேகலை கூறி யுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் எதிர்ப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பி னர் செல்வராஜ் பேசும்போது, சொத்து வரியை உயர்த்தும் முடிவு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. ஒன்றிய அரசின் நிர்பந்தம் என்பதால் வரியை உயர்த்து வதாக சொல்வதை ஆட்சேபிக்கி றோம். சொத்து வரியை உயர்த்தினால் தான் உள்ளாட்சிகளுக்கு ஒன்றிய அர சின் நிதி வழங்கப்படும் என்பதை கண் டிக்கிறோம். நகர்ப்புறத்தில் தொழில், வணிகம் என பல்வேறு இனங்கள் மூலம் பல லட்சம் கோடி ரூபாய் வசூ லிக்கும் ஒன்றிய அரசு அந்த தொகை யில் இருந்து மக்களின் அடிப்படை வச திகளுக்கு நிதி ஒதுக்கும்போது சொத்து வரியை உயர்த்த சொல்வது அநியாயம். ஒன்றிய அரசின் இந்த அடாவடித் தனத்தை மாநில அரசு கண்டிப்பதற்கு பதில் வரிச்சுமையை அதிகரிப்பது ஏற்புடையதல்ல. வரி விதிக்கும் அதிகாரம் உள்ளாட்சி உறுப்பினர்களுக்கு இருக்கும் நிலை யில், மாநில அரசு ஆளுநர் அறிவிக்கை மூலம் வரியை உயர்த்துவது தவறா னது, உள்ளாட்சி ஜனநாயகத்தை தகர்க்கும் நடவடிக்கையாகும். ஏற்கெ னவே பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு, தொழில் நெருக்கடி, வேலை இழப்பு என பல்வேறு பாதிப்பு களை மக்கள் சந்தித்து வரும் நிலை யில் திடீரென சொத்து வரியை உயர்த் துவது வேதனை தரத்தக்கது. எனவே சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும். மேலும் கடந்த 11 ஆண்டு காலமாக உள்ளாட்சி நிர்வாகத்தில் சொத்து வரி விதிப்பில் பல்வேறு முறைகேடு கள் நடைபெற்றுள்ளன. எனவே முறை யாக ஆய்வு செய்து அதற்கு உரிய வரி விதித்தாலே மாநகராட்சிக்கு வருவாய் கூட வாய்ப்புள்ளது. எனவே தற்போது சொத்து வரி உயர்வு தேவையற்றது என்று கூறினார்.
மதிமுக மாமன்ற உறுப்பினர் ஆர். நாகராஜன், மக்களிடம் எதிர்ப்பார்ப் பும், செய்ய வேண்டிய பணிகளும் அதி கமாக இருக்கும் நிலையில் வரியை உயர்த்த வேண்டியுள்ளது. ஆனால் அதிகமாக உயர்த்தாமல் குறைவாக உயர்த்தலாம் என்றார். காங்கிரஸ் உறுப்பினர் செந்தில்குமார் பேசும் போது, தமிழக முதல்வர் இஷ்டப்பட்டு உயர்த்தவில்லை, கஷ்டப்பட்டு உயர்த்துவதாக கூறியுள்ளார். இஷ்டப் பட்டு செய்யாத எந்த விசயத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம் என்றார். அதேபோல் முஸ்லீம் லீக், பாஜக உறுப்பினர்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் திமுக சார்பில் பேசிய தம்பி கோவிந்தராஜ், மாநகராட்சி தற் போது ஐசியுவில் உள்ளது. அதற்கு கசப்பு மருந்து கொடுத்துத்தான் மீட்க வேண்டும் என்று வரி உயர்வை நியாப் படுத்தி பேசினார்.
இதன் பிறகு பேசிய மேயர் தினேஷ் குமார், பாஜக ஆளும் மாநிலங்களில் மாநகராட்சிகளுக்கு விதிக்கப்பட் டுள்ள வரி விகிதத்தை விட இங்கு கு றைவாக இருப்பதாக புள்ளி விபரத்து டன் சுட்டிக் காட்டினார். அத்துடன் கடந்த 11 ஆண்டு காலம் அதிமுக ஆட் சிக் காலத்தில் எந்த வளர்ச்சிப் பணியும் நடைபெறவில்லை. வளர்ச்சிப் பணி களை செய்ய இந்த தீர்மானத்தை நிறை வேற்றுவதாக கூறினார். முதலில் வாக் கெடுப்புக்கு கையுயர்த்தும்படி கூறி னார். ஆளும் கட்சியினர் கை உயர்த் திய நிலையில் அதிமுகவினர் ஏதோ கருத்தைப் பேச முயன்றனர். அப் போது உறுப்பினர்கள் பலரும் எழுந்து பேச முயன்றதால் குழப்பமான நிலை, சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து தீர் மானம் நிறைவேறியதாக அறிவித்து விட்டு மேயர் தினேஷ்குமார் கூட் டத்தை முடித்து வைத்து வெளியே றிச் சென்றார். இதன் பிறகு அதிமுக வினர் எதிர்ப்பு முழக்கம் எழுப்பினர்.
திருப்பூரில் சொத்து வரி உயர்வு எவ்வளவு?
திருப்பூர் மாநகராட்சியில் 600 சதுர அடிகளுக்கு உட்பட்ட குடியிருப்பு கட் டிடங்களுக்கு 25 சதவிகிதம், 1200 சதுர அடி வரை 50 சதவிகிதம், 1800 சதுர அடி வரை 75 சதவிகிதம், 1800 சதுர அடிக்கு மேல் 100 சதவிகிதம் அளவுக் கும், குடியிருப்பு அல்லாத வணிக கட்டி டங்களுக்கு 100 சதவிகிதம், தொழிற் சாலை கட்டிடங்களுக்கு 75 சதவிகி தம், சுயநிதி பள்ளி மற்றும் கல்லூரி கட் டிடங்களுக்கு 75 சதவிகிதம் அள வுக்கு சொத்து வரியை உயர்த்தி தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.