கோவை, ஆக. 5- போக்சோ குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டம் செயல்படுத்த உள்ள தாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாரா யணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகை யில், 2022 ஆம் ஆண்டிலிருந்து தொலைந்து போன செல் போன்களை மீட்பதற்காக தனிப்படை அமைத்து மீட்புப் பணி யில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை சுமார் 2300 தொலைந்து போன செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளோம். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ரூ3 கோடியை 70 லட்சம் மதிப்பிலான தொலைந்து போன செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. சைபர் குற்றங்களைப் பொறுத்தவரை இந்த ஆண்டு மட்டும் இதுவரை 84 எப்ஐஆர்கள் பதியப்பட்டுள்ளது. 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டு பொதுமக்கள் வசம் ஒப்படைக்கப்பட் டுள்ளது. சைபர் குற்றங்களை பொருத்தவரை பெரும்பா லான குற்றங்கள் நிதி சார்ந்தவைகள். பொதுமக்கள் தேவை யில்லாத லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம். மேலும், போக்சோ வழக்குகளை பொருத்தவரை கடந்த ஜூன் 30 வரை 139 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 135 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பத்து வழக்குகளில் தண்டனை பெற்று தந்துள்ளோம். ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் மூலம் அனைத்து பள்ளிகளிலும் போக்சோ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத் தப்பட்டு வருவதாகவும் 2022-2023 கல்வியாண்டில் மட்டும் ‘ ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்’ மூலம் 500க்கும் மேற்பட்ட சிறு குற்றங்கள் கண்டறியப்பட்டு தடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.