சேலம், டிச.2- கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர் பாக விசாரணை நடத்துவதாக கூறி, இஸ்லா மியர்கள் துன்புறுத்துவதாகக்கூறி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மதச்சார்பற்ற கட்சியினர் தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம் பாக செயல்படும் காவலர்கள் மீது நடவ டிக்கை எடுக்ககோரி, அனைத்து கட்சியினர் மற்றும் இயக்கங்களின் கூட்டமைப்பு குழு சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் புகார் மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில், சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக காவல் ஆணை யாளரின் நேரடி பார்வையில் இயங்கும் “ஸ்பெஷல் இன்டெலிஜென்ஸ் செல்” என்ற பிரிவை சேர்ந்த காவலர்களின் சிலர் அரசு அங்கீகரிக்கப்பட்ட கட்சி மற்றும் இயக்கங்க ளில் இருக்கும் இஸ்லாமியர்களிடம் சட்ட விரோதமாக ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இஸ்லாமியர்களின் வீட்டில் பெண் கள் மட்டும் தனியாக இருக்கும் நேரத்தில், பெண் காவலர்கள் இல்லாமல் விசாரணை நடத்துகிறார்கள். இஸ்லாமியர்கள் பணியாற் றும் நிறுவனங்களளுக்கு சென்று ஆய்வு செய்வது, வாடகைக்கு இருக்கும் வீடுகளில் நேரடியாக சென்று விசாரிப்பது உள்ளிட்ட செயலில் ஈடுபட்டு வருவதால் மனஉளைச்ச லுக்கு ஆளாகி வருவதாக அதில் கூறப் பட்டுள்ளது. மேலும், இஸ்லாமியர்கள் அனைத்துக் கட்சிகளிலும் பொறுப்புகளில் உள்ளனர்.
அவர்கள் மீது அவதூறாகவும், சந்தேகம் விளைவிக்கும் இந்த ஆய்வை அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டிப்பதாக தெரிவித் தனர். இதுபோன்ற ஆய்வுகளை கைவிட்டு சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்லாமியர்கள் மீது தவ றான எண்ணத்தை உருவாக்கும் வகையில் இந்த ஆய்வுகள் நடத்தப்படுகிறது. இதன் மூலம் மக்கள் மத்தியில் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கக்கூடிய செயலாக இது விளங்கு கிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே புகார் மனுவை வாங்குவ தற்கு காலதாமதம் செய்ததாகக்கூறி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதன்பின் போராட்டத்தில் ஈடுபட்டோரி டம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மனு அளிக்க அழைத்துச் சென்றனர். அம்மனுவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் மேவை.சண்முக ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி நாவ ரசன், மாநகர் மாவட்ட பொருளாளர் காஜா மைதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மூஸா, மதிமுக மாநகர் மாவட்ட தலைவர் ஆனந்தராஜ், திராவிடர் விடுதலைக் கழக கிழக்கு மாவட்ட செயலா ளர் டேவிட் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்பு களின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்ட னர்.