பாலஸ்தீனம் மீது தாக்குதலை தொடுத்து வரும் இஸ்ரேலை கண்டித்து கோவை மக்கள் ஒற்றுமை மேடை உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகளை சார்ந்த ஏராளமானோர் இன்று கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலின் உச்சக்கட்டமாக ஹமாஸ் இயக்கத்தினர் திடீரென இஸ்ரேல் மீது அதிரடி தாக்குதலை நடத்தினர் இதையடுத்து பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலை கண்டித்து கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே சிஐடியூ, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், மக்கள் ஒற்றுமை மேடை உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். கோவை மக்கள் ஒற்றுமை மேடையின் யுகே சிவஞானம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.