districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

குப்பைகளை தரம் பிரித்து ஒப்படைத்த பொதுமக்களுக்கு பரிசு

கோவை, அக்.29- மேட்டுப்பாளையத்தில், குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைத்த பொதுமக்களுக்கு நகராட்சி ஆணையர் பரிசுகளை வழங்கி பாராட்டினர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சி யில் உள்ள 33 வார்டுகளிலும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து தூய் மைப் பணியாளர்களிடம் ஒப்படைத்தால் தீபாவளி பரிசு காத்திருக்கிறது என நகராட்சி நிர்வாகம் அறிவித்தது. அதன்படி திங்களன்று 4 ஆவது வார்டுக்குட்பட்ட மதீனா நகர், எல்.எஸ்.புரம் பகுதிகளில் தூய்மைப் பணியாளர் களிடம் தரம் பிரித்த குப்பைகளை வழங்கிய பொதுமக்க ளுக்கு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. நகராட்சி ஆணையர் அமுதா, நகர்மன்றத் தலைவர் மெஹரீபா பர் வீன் அஷ்ரப் அலி, கவுன்சிலர் சுனில்குமார் உள்ளிட் டோர் பொதுமக்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி னர். இதன்பின் நகராட்சி ஆணையர் அமுதா கூறுகை யில், தீபாவளியன்று ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப் பதற்கு நேர நிர்ணயம் செய்து தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்கள் குறைந்த ஒலியுடன், குறைந்த அளவில் காற்று மாசு ஏற்படுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண் டும். பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அப்பகுதியில் உள்ள நலச் சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். எனவே, பொதுமக்கள் இந்த அறிவுரைகளை பின்பற்ற வேண்டும், என்றார்.இதில், சுகாதார ஆய்வாளர் மகாராஜன், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட னர்.

லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது

சேலம், அக்.29- அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில் லஞ்சம் வாங்கியதாக பில் கலெக்டர் திங்க ளன்று கைது செய்யப்பட்டார். சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண் டல அலுவலகத்தில் பில் கலெக்டராக பணி புரிந்து வருபவர் ராஜா. இவரிடம் மிட்டா புதூர் ஐந்தாவது வார்டு பகுதியைச் சேர்ந்த சண் முகம் என்பவரது மகன் ஷாஜி (35) தனது புதிய வீட்டிற்கான சொத்து வரி விதிப்பு குறித்து  பில் கலெக்டர் ராஜாவிடம் ஆவணங்களை வழங்கியுள்ளார். அப்போது ராஜா, ரூபாய் 35  ஆயிரம் லஞ்சம் வழங்கினால் சொத்து வரி  தருவதாக கூறியுள்ளார். இதனையடுத்து அவரிடம் பேரம் பேசிய ஷாஜி முப்பதாயிரம் ரூபாய் லஞ்சம் தருவதாக கூறியுள்ளார். பின் னர், ஷாஜி இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீ சாரிடம் தெரிவித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டு களை ஷாஜி-யிடம் கொடுத்து ராஜாவிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர். அதனைப் பெற்றுக் கொண்டு ராஜாவிடம் வழங்கிய போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப் புத்துறை காவல் ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார் ராஜாவை கையும், களவுமாக பிடித்தனர். பின்பு அவரிட மிருந்து ரூபாய் 30,000 பறிமுதல் செய்யப்பட் டது. மேலும் இது குறித்து ராஜாவிடம் போலீ சார் விசாரித்து வருகின்றனர்.

ராசிபுரத்தில் புதிய மினி தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை

நாமக்கல், அக்.29- ராசிபுரத்தில் புதிய மினி தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என, ராஜேஸ்குமார் எம்.பி., தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு சாலை, ஹோட்டல் கோஸ்டல் ரெசிடென்சியில் செவ்வாயன்று, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவ னங்கள் கடன் வசதியாக்கல் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ச. உமா தலைமை வகித்தார். நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன், மேயர் து.கலாநிதி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாநிலங் களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலை வருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், 34 பயனாளிகளுக்கு ரூ.22.45 கோடி மதிப்பில் தொழில் கடனுதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ராஜேஸ் குமார் எம்.பி., பேசுகையில், தமிழ்நாட் டின் தொழில் வளர்ச்சிக்காக, அனை வரையும் உள்ளடக்கிய நிலையான மற் றும் நீடித்த வளர்ச்சியினை பெறும் நோக்கமாக பல்வேறு கடனுதவி திட்டங் கள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் மூலமாக செயல்படுத்தப் பட்டு வருகின்றது. உலக முதலீட்டாளர் மாநாடு - 2024 இல் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் முதலீட்டிற்கான இலக்காக ரூ.1693.83 கோடி நிர்ணயிக்கப்பட்டு 325 புரிந் துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றிக் கொள்ளப்பட்டன. இதன் மூலம் 8,832  வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்பு கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட 850 ஹெக்டர் பரப்பளவில் சிப்காட் தொழில் பூங்கா உருவாக்கிட இடம் தேர்வு செய் யப்பட்டு பணிகள் நடைபெற்று வரு கின்றது. சிப்காட் தொழில் பூங்கா அமைக் கப்படுவதால் நாமக்கல் மிகப்பெரிய தொழில் நகரமாக மாறும். விரைவில் ராசிபுரத்தில் மினி டைடல் பார்க் அமைக்கப்படும். மேலும், சுமார் ரூ.90 கோடி மதிப்பில் டென்மார்க் தொழில் நுட்பத்துடன் கூடிய நவீன பால் பதப் படுத்தும் ஆலை, சுமார் ரூ.196 கோடி  மதிப்பீட்டில் நாமக்கல் நகரின் போக்கு வரத்து நெரிசலை குறைக்க புறவழிச் சாலை அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகின்றன, என்றார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் செ. பூபதி, மாவட்ட தொழில் மைய பொது  மேலாளர் வீ.சகுந்தலா, நாமக்கல் மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தலைவர் ந. இளங்கோ, தாட்கோ மாவட்ட மேலா ளர் பா.ராமசாமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கா.முருகன், மண்டல மேலாளர் க.ஸ்ரீநிவாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருவிலுள்ள பாலினம் குறித்து தெரிவித்த பெண் மருத்துவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

சேலம், அக்.29- கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்து கருவின் பாலினம் குறித்து தெரி வித்த வழக்கில், வாழப்பாடியைச் சேர்ந்த பெண் மருத்துவருக்கு 3 ஆண்டுகள்  சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள் ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம், வாழப்பாடியில் உள்ள ஒரு  தனியார் மருத்துவமனையில், பாலினத் தேர்வு தடுப்புப் பிரிவினர் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் ஆய்வு நடத்தி னர். அப்போது, அந்த மருத்துவமனை ஸ்கேன் மையத்தில் கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்த விவரம் குறித்த ஆவ ணங்களை முறையாக பராமரிக்காமல் இருந்ததும், கருவின் பாலினம் குறித்து  தகவல் தெரிவித்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, அந்த மருத்துவமனை ஸ்கேன் பரிசோதனை மையத்துக்கு ‘சீல்’ வைத்த மருத்துவக் குழுவினர், புகாரில் சிக்கிய பெண் மருத்துவர் செல்வாம்பாவிடம் விசாரணை நடத்தி னர். தொடர்ந்து, கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்த விவரம் குறித்த ஆவணங்களை முறையாக பரா மரிக்காதது, கருவின் பாலினம் குறித்து  கர்ப்பிணிகளுக்கு தகவல் தெரிவித்தது என மருத்துவர் செல்வாம்பா மீது  வாழப்பாடி குற்றவியல் மற்றும் உரிமை யியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தனி வழக்கு தொடரப்பட்டது. 6 ஆண்டு களாக நடந்து வந்த இந்த வழக்கு  விசாரணையில், ஸ்கேன் பரிசோதனை ஆவணங்களை முறையாக பராமரிக் காதது, கருவின் பாலினம் குறித்து தெரி வித்தது உறுதியானதால், பெண் மருத் துவர் செல்வாம்பாவுக்கு 3 ஆண்டு கள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயி ரம் அபராதமும் விதித்து, வாழப்பாடி நடுவர் நீதிமன்ற நீதிபதி சன்மதி தீர்ப் பளித்தார். மேலும், 5 ஆண்டுகளுக்கு சிகிச்சை அளிக்க தடை விதிக்கவும் மருத்துவத்துறைக்கு பரிந்துரை செய்ய உத்தரவிட்டார்.

மாசடைந்து வரும் ஏற்காடு படகு இல்ல ஏரி!

சேலம், அக்.29- ஏற்காட்டிலுள்ள படகு இல்ல ஏரி, கழிவுநீர் கலப்பதால் மாசடைந்து வருவதை தடுத்து, ஏரியை மீட்டெடுக்க வேண் டும் என பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக, சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு திகழ்கிறது. “ஏழைகளின் ஊட்டி” என்றழைக்கப்படும் ஏற்காட்டின் மையப் பகுதியில் அழகிய ஏரி அமைந்துள்ளது. இதனை சுற்றிலும் தோட்டம் மற்றும் அனைத்து பக்கங்களிலிருந்தும் சூழ்ந்துள்ள உயரமான மலைகள், ஏரிக்கு வசீகரமான தோற்றத்தை தரு கிறது. ஏரியில் சவாரி செய்ய மோட்டார் படகுகள், மிதி  படகுகள் குறைந்த கட்டணத்தில் கிடைக்கின்றன. கூடுத லாக, சுற்றுலாப் பயணிகள் சுயமாக படகு சவாரி செய் யும் வசதியும் உள்ளது. ஏரியின் கரையில், சுற்றுச்சூழல் பூங்கா  மற்றும் ஏரி பூங்கா உள்ளன. குழந்தைகள் சுதந்திரமாக விளையாடலாம் மற்றும் அருகிலுள்ள ஊஞ்சல்களைப் பயன் படுத்தலாம். சீசன் மற்றும் கோடை காலத்தில், ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளம் என இந்தியாவில் அனைத்து மாநிலங்களில் இருந்து திர ளான சுற்றுலாப் பயணிகள் வந்து, இயற்கை அழகை கண்டு  ரசித்து செல்கின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காடு ஏரி, தற்போது உரிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. ஏற்காடு மலைப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புகளின் கழிவுநீர், நேரடியாக கலக்கும் நிலையில், துர்நாற்றமும் நோய் தொற்று அபாயமும் உள்ளது. ஏற்காட்டிற்கு சுற்றுலா வருபவர்கள், இந்த ஏரியில் படகு சவாரி செய்யாமல் திரும்புவது இல்லை.  ஏற்காட்டின் தனி அடையாளமாக விளங்கும் இந்த ஏரியில், சுற்றியுள்ள தனியார் விடுதிகளில் இருந்து கழிவுநீர் நேரடி யாக கலக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்த அவல நிலையால், சுமார் 7 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி, தற்போது 75 சதவீதம் ஆகாய தாமரையாலும், செடி கொடிகளாலும் மூடப்பட்டுள்ளது. இந்த ஏரியின் மூலம், அருகிலுள்ள  கிணறுகள் மூலம் ஏற்காட்டில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது ஏரி மாச டைந்துள்ளதால் கழிவுநீர் கலந்த தண்ணீரையே பொது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, தமிழக அரசு இந்த  விவகாரத்தில் தனிக்கவனம் செலுத்தி, ஏரியை தூய்மைப்ப டுத்தி, பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முறையாக நடவடிக்கை எடுக்காத  காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

திருப்பூர், அக்.29- பொதுமக்கள் அளித்த புகார் மீது சரியான முறையில்  நடவடிக்கை எடுக்காத தெற்கு காவல் நிலைய காவலர்களை,  காவல் ஆணையர் லட்சுமி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து  உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் துணை ஆய்வாள ராக பணிபுரிந்து வந்தவர் கார்த்தி. திருப்பூர் தெற்கு காவல்  நிலையத்தில் பொதுமக்கள் அளித்த புகார் மீது சரியான முறை யில் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என மாநகர காவல்  ஆணையர் அலுவலகத்தில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள் ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல் ஆணையர் லட்சுமி தெற்கு காவல் நிலைய துணை ஆய்வாளர்  கார்த்தி,  தலைமைக் காவலர் சின்னச்சாமி, முதல்நிலை காவ லர் மாதேஸ்வரன் ஆகிய மூவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். அதேபோல் தெற்கு காவல்  நிலைய நுண்ணறிவு பிரிவு காவலர் நாகேந்திரனை திருமுரு கன்பூண்டி காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவு காவ லராக மாற்றப்பட்டுள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் சிறப்பு ஏற்பாடுகள்

திருப்பூர், அக்.29- திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி  மற்றும் அதனைச் சார்ந்த ஆயிரக்கணக் கான நிறுவனங்கள் செயல்பட்டு வரு கின்றன. இதில், பல்வேறு வெளி மாநி லங்கள், தமிழகத்தின் பிற மாவட்டங்க ளில் இருந்தும் லட்சக்கனக்கானோர் பணியாற்றி வருகின்றனர். இங்கு தங்கி ஆண்டு முழுவதும் கடுமையாகப் பணி புரியக் கூடிய தொழிலாளர்கள் பொங் கல், தீபாவளி உள்ளிட்ட தொடர் விடுமுறை நாட்களில், தங்கள் சொந்த  ஊர்களுக்கு செல்வது வழக்கம்.  இந்நிலையில் தீபாவளி பண்டிகையை யொட்டி தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கி யுள்ளனர். சிறப்பு பேருந்துகள்: திருப்பூரில் இருந்து சொந்த ஊர் செல்லும் தொழிலாளர்களுக்காக திருப் பூர் மத்திய பேருந்து நிலையம், கோவில்  வழி பேருந்து நிலையம், புதிய பேருந்து  நிலையம் ஆகிய இடங்களில் இருந்து  பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல 320  சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினர். மேலும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், தொழிலாளர்கள் பேருந் துகளில் ஏறுவதற்கு வசதியாக பேருந்து  நிலையங்களில் தடுப்பரண்கள் அமைக் கப்பட்டு உள்ளன.  கூட்ட நெரிசலுடன் காணப்படும் ரயில் நிலையம்: திருப்பூரில் பணியாற்ற கூடிய  பிகார், மேற்கு வங்கம், உத்தரபிரதே சம் உள்ளிட்ட பல்வேறு வடமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலங்க ளுக்கு செல்ல ரயில் போக்குவரத்தை நம்பியுள்ளனர். தீபாவளி தொடர் விடு முறை விடப்பட்டதால் ஞாயிறு முதலே  ரயில்களில் தொழிலாளர் கூட்டம் நிரம்பி  காணப்பட்டன. ரிசர்வ் செய்யப்படாத பெட்டிகளிலும், தொழிலாளர்கள் நின்ற வாறே பயணம் செய்தனர். தன்பாத், ஹூப்ளி, கொல்லம், பாட்னா உள்ளிட்ட பகுதிகளுக்காக 9 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், இது போதுமானதாக இல்லை என பய ணிகள் தெரிவித்தனர். ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த 50க்கும் மேற் பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்தனர். மேலும், திருப்பூர் மற்றும்  கோவை ரயில் நிலையங்களில் நடை மேடையில் கூட்டம் சேருவதை தவிர்க் கும் வகையில் இரு தினங்களுக்கு நடை மேடை டிக்கெட் விற்பனை இல்லை என  ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு: பள்ளிகளில் விபத்தில்லா தீபாவளி  கொண்டாடுவது குறித்து தீய ணைப்புத் துறை மற்றும் ஆசிரியர்கள்  சார்பில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் சிறியவர்கள் முதல் பெரிய வர்கள் வரை பட்டாசு வெடிக்கும்போது பாதுகாப்பு வழிமுறைகளைப் பின் பற்ற வேண்டும். சிறுவர், சிறுமியர் பட் டாசு வெடிக்கும்போது பெற்றோர் அரு கிலேயே இருக்க வேண்டும். அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பட்டாசு களை சிறுவர்கள் கையாளுவதை தடுக்க வேண்டும். பட்டாசு வெடித்த வுடன் கைகளில் பட்டாசு மருந்துகள்  இருக்கும் நிலையில் திண்பண்டங்க ளைத் தொடுவதற்கு முன்பாக கைகளை நன்றாக கழுவ வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது அருகில் வாளியில் தண்ணீர், மண் போண்ற பொருட்களை வைத்திருக்க வேண்டும்  என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு: கவனக்குறைவால் பட்டாசு  வெடித்து பாதிப்புக்குள்ளானவர்க ளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய வகை யில், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 10 படுக்கைக ளுடன் சிறப்பு வார்டு தயார் செய்யப்பட் டுள்ளதாக மருத்துவக்கல்லூரி மருத்து வமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை மேற்கொள்ள வரலாம். சுழற்சி முறை யில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இருப் பார்கள் என அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் தெரி வித்தனர்.

நவ.8 காந்தியடிகள் குறித்து பேச்சுப்போட்டி

நவ.8 காந்தியடிகள் குறித்து பேச்சுப்போட்டி திருப்பூர், அக்.29– அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி திருப்பூர்  மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்க ளுக்கு நவ.8ஆம் தேதி திருப்பூர், ஜெய்வாபாய் மாநகராட்சி மாதிரி பெண்கள் மேனிலைப்பள்ளியில் பேச்சுப்போட்டி நடத் தப்பட உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு, “சத்திய சோதனை,  காந்தியடிகளும்; அறப்போராட்டமும், மதுரையில் காந்திய டிகள்” என்ற தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கு, “காந்தியடிகளின் தண்டி யாத்திரை, அண்ணலின் வரலாற்றில்  தமிழகத்தின் பங்கு, மனிதவாழ்க்கையும்; காந்தியடிகளும்” ஆகிய தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடைபெற உள் ளது. முதலில் பள்ளி மட்டத்தில் பேச்சுப்போட்டி நடத்தி தேர்வு  செய்தவர்களை மாவட்டப் போட்டிகளுக்கு அனுப்ப வேண் டும், மேலும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி யில் பங்கேற்கும் மாணவர்கள் பெயர்ப்பட்டியலை ddtamil 607@gmail.com என்ற மின்னஞ்சலில் நவம்பர் 5ஆம் தேதிக் குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கானப் போட்டி 8ஆம் தேதி காலை 10  மணிக்கும், கல்லூரிப் போட்டி பிற்பகல் 2 மணிக்கும் தொடங் கும் என்று மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள் ளார்.

கழுத்தை அறுத்து பெண் கொலை

கழுத்தை அறுத்து பெண் கொலை உடுமலை, அக்.29- உடுமலை அருகே பள்ளபாளையத்தில் வீட்டில் தனியாக  இருந்த மாரியம்மாள் என்பவர் தலை மற்றும் கழுத்து பகுதி யில் வெட்டப்பட்டு இறந்த நிலையில் சடலமாகக் கிடந்தார். இது குறித்து தளி போலீசார் வழக்குபதிவு செய்து,  மூன்று  தனிப்படை அமைத்து கொலையாளிகளைப் பிடிக்க விசா ரணை மேற்கொண்டு உள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி மாரி யம்மாள் (வயது 46). இவர்களது மகள்கள் இருவருக்கும் திரு மணமான நிலையில் செந்தில்குமார் கட்டிட வேலைக்காக வெளியூர் சென்றிருந்தார். இந்த நிலையில் மாரியம்மாள் வீட் டில் தனியாக இருந்துள்ளார். நீண்ட நேரமாகியும், மாரியம் மாள் வீட்டை விட்டு வராததால் அருகில் உள்ளவர்கள் சென்று  பார்த்தபோது மாரியம்மாள் தலையில் வெட்டுப்பட்டும், கழுத்து அறுக்கப்பட்டும் இறந்துகிடந்தது தெரியவந்தது.

தீபாவளி: 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

தீபாவளி: 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் சேலம், அக்.29- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சேலம் கோட்டம் சார் பில் 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம்  கோட்ட நிர்வாக இயக்குநர் கே.இளங்கோவன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், தீபாவளி பண்டிகையை முன் னிட்டு பல்வேறு வழித்தடங்களில் நவ.4 ஆம் தேதி வரை பய ணிகளின் தேவைக்கேற்ப 500 சிறப்புப் பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், தட நீட்டிப்பு மற்றும் வழித்தடப் பேருந்துகள் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சிறப்புப் பேருந்து இயக்கம் முடியும் வரை, அனைத்து முக்கியப் பேருந்து நிலையங்களிலும் போக்குவரத்தைக் கண்காணிக்கவும், சீர் செய்யவும் அலுவலர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பார் கள். பயணிகள் பேருந்துகளில் பட்டாசுகளைக் கொண்டு  செல்ல அனுமதியில்லை. பயணிகளின் உடமையைக் கண் காணிக்க, நேர கண்காணிப்பாளர்கள், பயணச்சீட்டு பரி சோதகர்கள், நடத்துநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதென, தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூத்துக்குலுங்கும் ரெட்லீப் மலர்கள்

உதகை, அக்.29- சாலையோரங்களில் பூத்துக்குலுங்கும் ரெட்லீப் மலர்கள் சுற்றுலாப் பயணிகள் ஆச் சரியத்துடன் கண்டு களித்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டம், மஞ்சூர் சுற்றுவட்டா ரப் பகுதிகளில் தற்போது நிறம் மாறும் தன்மை  கொண்ட ரெட்லீப் மலர்கள் ஏராளமாக பூத்துள்ளன. மஞ்சூர், உதகை மற்றும் குன் னூர் உள்ளிட்ட சாலைகளிலும் ரெட்லீப் மலர் கள் ஏராளமாக பூத்துள்ளது. இதன் இலைகள் முதலில் பச்சை நிறமாக வும், பின்னர் பழுப்பு, மஞ்சள் மற்றும் மெருன்  நிறங்களாக மாறி இறுதியில் சிவப்பு நிறத் தில் காட்சியளிப்பதால் இந்த பூக்களை நிறம்  மாறும் பூக்கள் என அழைக்கின்றனர். மஞ்சூர் பகுதியில் உள்ள முக்கிய சுற்று லாத் தலங்களான அவலாஞ்சி, பென்ஸ் டாக் காட்சிமுனை உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் வெளியூர்களில் இருந்து ஏராள மான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்ற னர். அவ்வாறு வரும் பயணிகள் இந்த ரெட்லீப்  மலர்களை கண்டு புகைப்படம் எடுத்து செல் கின்றனர்.

வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு

தருமபுரி, அக்.29- மாரண்டஅள்ளி அருகே சிறுமியை திரு மணம் செய்த வாலிபர் மீது, காவல் துறை யினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஊர் நல அலுவலராக பணிபுரிந்து வருபவர் சாந்தி  (58). இவருக்கு மாரண்டஅள்ளி அருகே  உள்ள கிராமத்தில் குழந்தை திருமணம்  நடைபெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள் ளது. அதன்பேரில் சம்பந்தப்பட்ட கிராமத் திற்கு சென்று விசாரணை செய்த போது, பெல மாரன அள்ளியைச் சேர்ந்த சுதாகர் என்ற  வாலிபர், இளங்கலை தமிழ் முதலாமாண்டு படித்து வந்த மாணவியை காதலித்து வந் துள்ளார். இருவரும் காதலிக்கும் விஷயம் பெற்றோருக்கு தெரிய வரவே, சுதாகர் சிறு மியை அவரது கிராமத்தில் இருந்து அழைத் துச் சென்று, மல்லாபுரம் பாவளி சென்றாய பெருமாள் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்துள் ளனர். இதைத்தொடர்ந்து சிறுமி கர்ப்பமா னது தெரியவந்தது. இதுகுறித்து ஊர் நல  அலுவலர் மாரண்ட அள்ளி காவல் நிலையத் தில் புகாரளித்தார். அதன்பேரில் காவல் துறை யினர், போக்சோ மற்றும் இளம் வயது குழந்தை திருமணம் ஆகிய இரு பிரிவுக ளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொழிலாளர் நலனில் அலட்சியம் காட்டுவதா? உதகையில் ஆர்ப்பாட்டம் நடத்த சிஐடியு முடிவு

உதகை, அக்.29- தூய்மைப் பணியாளர்களுக்கு போனஸ் உள்ளிட்ட சட்ட உரிமைகள் வழங்காமல் அலட்சியம் காட்டும் உதகை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நவ 6 ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த சிஐடியு அழைப்பு விடுத்துள்ளது.  இதுகுறித்து, நீலகிரி மாவட்டம், சிஐடியு மாவட்டச் செயலாளர் வினோத் செவ்வாயன்று செய்தியா ளர்களிடம் கூறுகையில், உதகை நக ராட்சியில் தூய்மைப் பணியா ளர்கள் போனஸ் கோரி கடந்த 23 ஆம்  தேதியன்று நகராட்சி அலுவலகத் தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் நகர் நல அலுவலர் மற்றும் நகராட்சி ஆணையர் பேச் சுவார்த்தை நடத்தினர். இந்நிலை யில், நகராட்சி ஆணையர் தொழிற் சங்க தலைவர்களை அவதூறாக பேசினார். இதை கண்டித்து தூய் மைப் பணியாளர்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர். மேலும், ஆட்சியரிட மும் இது குறித்து முறையிட்டனர். இதற்கு ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதன்  பேரில் கோட்டாட்சியர் முன்னிலை யில் பேச்சுவார்த்தை நடத்தப்பட் டது. இந்நிலையில், உதகை நகராட்சி  ஆணையரின் நடவடிக்கையை கண்டித்து நவம்பர் 6 ஆம் தேதியன்று  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு மாவட்டக் குழு சார் பில் போராட்டம் நடத்த முடிவு  செய்யப்பட்டுள்ளது. மேலும்,  தேயிலை தோட்டத் தொழிலாளர்க ளின் சம்பளப் பிரச்சினை, தாய்  சோலை எஸ்டேட் தொழிலாளர்க ளின் சம்பள நிலுவை மற்றும்  போனஸ் பிரச்சினை தொடர்பாக  மாவட்டத் தொழிலாளர் நலத்துறை  ஆணையரிடம் முறையிடப்பட்டது. அவர் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால், தாய் சோலை  மற்றும் மஞ்சூரில் தொழிலாளர்கள்  கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.