districts

img

வழக்கறிஞர்களுக்கான இறகுப்பந்து போட்டி வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

கோவை, செப்.17- வழக்கறிஞர்களுக்கான மாநில அளவிலான இறகுப் பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிக்களுக்கு பரிச ளிப்பு நிகழ்வு ஞாயிறன்று நடைபெற்றது.  கோவை இந்துஸ்தான்  கலை அறிவியல் கல்லூரி யில்  வழக்கறிஞர்களுக்கான மாநில அளவிலான இறகுப் பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில்  முதல் பரிசை சேலம் மாவட்ட வழக்கறி ஞர்கள் அணியும், இரண்டாம் பரிசை பாண்டிச்சேரி வழக்கறிஞர் அணியும், மூன்றாம் பரிசை கோவை வழக்கறிஞர் அணியும், நான்காம் பரிசை சென்னை வழக்க றிஞர் அணியும் வென்றன.  வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத்  தொகையை கோவை மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கோவை  வழக்கறிஞர் சங்க தலைவர் கே.எம்.தண்ட பாணி மற்றும் அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சிவக் குமார் ஆகியோர் வழங்கினர்.