districts

img

திருக்குறள் தின விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

உடுமலை, ஜன.8- திருக்குறள் தின வெள்ளி விழா ஆண்டு திருக்குறள் ஒப்பு வித்தல், கருத்தரங்கம் உள்ளிட்ட சிறப்பு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி செவ்வாயன்று நடைபெற்றது. திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டுகள் ஆனதை முன் னிட்டு, வெள்ளி விழா ஆண்டு திருக்குறள் ஒப்பிவித்தல், கருத் தரங்கம் உள்ளிட்ட சிறப்பு போட்டிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக உடுமலை கிளை நூலகம் எண்.1 சார்பில் கணக்கம்பாளையம் நடுநி லைப்பள்ளியில் இலக்கிய மன்ற விழாவில்  திருக்குறள் ஒப்பி வித்தல் போட்டி மற்றும் திருக்குறள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு செவ்வாயன்றுபள்ளி வளாகத்தில் பரிசுகள் வழங் கப்பட்டது. திருக்குறள் ஒப்பிவித்தல் போட்டியில் எஸ். அல்மீரா ஷப்ரா முதல் பரிசு, அ.முகமது ஆசிக் இரண்டாம் பரிசு, செ.மஹிதா மூன்றாம் பரிசு பெற்றனர். திருக்குறள் குறித்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட எஸ்.அல்மீரா ஷப்ரா முதல் பரிசு, அ.ராபியதுல் பஸ்ரியா இரண்டாம் பரிசு, சை.சையது விசாம் மூன்றாம் பரிசு பெற்றனர். போட்டி யில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங் கும் விழாவிற்கு உடுமலை வட்டார கல்வி அலுவலர் ஏஞ்சலின்  பிருந்தா தலைமை வகித்தார்.  இந்நிகழ்ச்சியில் இராமகிருஷ்ணன், மாவட்ட நூலக  அலுவலர் கார்த்திகேயன், உடுமலை முதல் கிளை நூலகத் தின் நூலகர் பீர்பாஷா ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகள்  வழங்கினர். மேலும் பள்ளி ஆசிரியர்கள் காயத்திரி, நாக வேணி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.