districts

img

பணியிடங்கள் தனியார்மய அரசாணை 139-ஐ ரத்து செய்ய எட்டு பேரூராட்சிகளின் செயல் அலுவலர்களிடம் சிஐடியு மனு

திருப்பூர், டிச.3- பேரூராட்சிகளில் தூய்மைப்பணி உள் ளிட்ட பல பணிகளை தனியார்மயப்படுத்தும் அரசாணை எண்: 139-ஐ ரத்து செய்ய வலி யுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு  பேரூராட்சிகளில் சிஐடியு ஊரக வளர்ச்சி உள் ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் மனு அளித்தனர். சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் கே.ரங்கராஜ் மற்றும் சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கச் செயலாளர் எஸ்.சிவரா மன் உள்ளிட்டோர் கடந்த வியாழன், வெள்ளி  ஆகிய இரு தினங்களில் எட்டு பேரூராட்சிக ளுக்கு நேரில் சென்று மனு அளித்தனர். மடத்துக்குளம், கொமரலிங்கம், சங்கரம நல்லூர், தளி, ஊத்துக்குளி, அவிநாசி, குன் னத்தூர், முத்தூர் ஆகிய எட்டு பேரூராட்சிக ளின் செயல் அலுவலரிடம் அளித்த இம்மனு வில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் 488  பேரூராட்சிகள் உள்ளன. திருப்பூர் மாவட்டத் தில் 15 பேரூராட்சிகள் உள்ளன. இந்த 15 பேரூ ராட்சிகளில் தூய்மைப் பணியாளர், குடிநீர் பணியாளர், ஓட்டுநர் மற்றும் டிபிசி ஊழியர் கள் என சுமார் 750 பணியாளர்கள் வேலை  செய்து வருகின்றனர். இவர்களில் பெரும்பா லானோர் தற்காலிக, சுயஉதவிக் குழு பணியா ளர்களாக உள்ளனர். பேரூராட்சி மக்களின் பொது சுகாதாரம், குடிநீர் விநியோகம் உள் ளிட்ட அடிப்படைத் தேவைகளில் இந்த ஊழி யர்களின் பங்களிப்பு முக்கியமானது. குறிப் பாக, கொரோனா பொது முடக்கக் காலத்தில்  இவர்களின் பணி அர்ப்பணிப்பு மிக்கதா கும்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 3ஆம்  தேதி வெளியிடப்பட்ட அரசாணை எண் 139  பேரூராட்சிகளில் தூய்மைப்பணி உள்ளிட்ட  பல்வேறு பணிகளை தனியார்மயப்படுத்த வழி வகுக்கிறது. இது பல ஆண்டுகளாக தூய் மைப் பணி உள்ளிட்ட பல பணிகளைச் செய்து வரும் மேற்கண்ட ஊழியர்களின் எதிர்கால வாழ்வை கடுமையாக பாதிக்கும். எனவே பேரூராட்சிகளில் தூய்மைப் பணி, குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பல  பணிகளை தனியார்மயப்படுத்தும் அரசா ணையை ரத்து செய்வதுடன், மேற்கண்ட ஊழியர்களுக்கு, தமிழக அரசின் குறைந் தபட்ச ஊதிய அரசாணை 62 (2டி) இன்படி  ஊதியம் வழங்கிட வேண்டும். பணி நிரந்தரம்  செய்திட வேண்டும் என்ற சிஐடியு அமைப் பின் கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத் திற்கு கொண்டு செல்ல வேண்டும் என கேட் டுக் கொண்டனர். இந்த சந்திப்பின்போது, மடத்துக்குளம் சிஐடியு கட்டுமான சங்க மடத்துக்குளம் தாலுகா செயலாளர் பன்னீர்செல்வம், ஓய் வூதியர் சங்க நிர்வாகி கருணாநிதி, சிஐடியூ  ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்  சங்க நிர்வாகிகள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் வையாபுரி, வேலுச்சாமி, நாக ராஜ், கன்னிமுத்து, கண்ணன், லோகு, கருப்பு சாமி, ரமணி, ரங்கநாதன், துரை, வீரம்மாள்,  சசி ஆகியோர் அவரவர் வேலை செய்யும் பேரூராட்சிகளில் உடன் பங்கேற்றனர்.