அவிநாசி, மே 15 – அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி நக ராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சி நகர்மன்ற உறுப் பினர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே, திடக் கழிவு மேலாண்மைப் பணியை தனியார்மய மாக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக ஆதரவு தெரிவித்த நிலையில், அதி முக, சிபிஐ வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தனர். தூய்மைப்பணி தனி யார்மயத்தை எதிர்த்து சிஐடியு தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருமுருகன்பூண்டி நகர்மன்ற அவசர கூட்டம் திங்களன்று நகர்மன்ற தலைவர் குமார் தலைமையிலும், நகராட்சி ஆணையர் அப்துல் ஹாரிஸ் முன்னிலையில் துவங்கி யது. இக்கூட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பை சேகரிக் கும் பணிகளை தனியாருக்கு அளிக்கும் தீர் மானத்தை நகர்மன்றத் தலைவர் குமார் முன் மொழிந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர்மன்ற உறுப்பினர்கள் சுப்ரமணியம், தேவராஜன், பார்வதி ஆகியோர் இந்த தீர்மா னத்தின் மீது வாக்கெடுப்பு மூலம் தீர் மானத்தைத் தோற்கடிக்கலாம் என்று மாற்றுக் கட்சி நகர்மன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தனர். இருப்பினும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் வெளிந டப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர்மன்ற உறுப் பினர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவேட்டில் பதிவு செய்யுமாறு வலியுறுத்தினர். ஆனால் நகராட்சி ஆணையர் இதற்கு பதிலளிக்கா மல், கூட்டம் முடிந்து விட்டது என்று , நகர்மன்ற கூட்டத்தில் இருந்து வெளியேறினார், இதனால் ஆவேசமடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர்மன்ற உறுப்பினர் கள், ஆணையர் அலுவலகத்திற்கு உள்ளே சென்று, ஜனநாயகரீதியான எதிர்ப்பை பதிவு செய்யாமல் அலட்சியப்படுத்தியதைக் கண் டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் தொழிலாளிகள் நகராட்சி அலுவலகத்தில் அமர்ந்து கண்டனம் முழக் கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, நகராட்சி ஆணை யர் மீண்டும் நகர்மன்ற அலுவலகத்திற்கு உள்ளே சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர்மன்ற உறுப்பினர்களின் கருத்தை கேட்டு எதிர்ப்பை பதிவேட்டில் பதிவு செய்தார். இதில் கடந்த முறை இதே தீர்மானத்தை முன்மொழிந்தபோது வாக்கெடுப்புக்கு விட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுகவைச் சேர்ந்த நகரமன்ற உறுப்பி னர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் தற்போது இக்கட்சிகளின் நகர்மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலை யில், மன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர் கள் இல்லாத நிலையில், திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் ஆதரவில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது. திடக்கழிவு மேலாண்மைப் பணி தனியார் மயத்தைக் கண்டித்து தொழிலாளிகள் 70- க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட னர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் அவர்களுக்கு ஆதரவு தெரி வித்தனர்.