கோவை, அக்.9- பாலியல் குற்றங்கள் போன்ற வைகள் குறித்து விழிப்புணர்வு ஏற் படுத்திட தனியார் பள்ளிகளுக்கு காவலர்கள் செல்கையில், ஒரு சில தனியார் பள்ளிகள் ஏதோ கார ணத்தை சொல்லி தட்டிக்கழிப்பதாக கோவை மாநகர காவல் ஆணையர் குற்றஞ்சாட்டினார். கோவை மாநகர காவல்துறை யினர் தனியார் அமைப்புகளுடன் இணைந்து போதைப் பொருட்க ளுக்கு எதிரான டிஜிட்டல் கையெ ழுத்து இயக்கத்தை துவக்கி உள்ள னர். க்யூஆர் கோடு மூலம் பெண்கள் அவர்களின் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவிப்பதற்காக இந்த முயற்சி மேற்கொண்டுள்ளது. இந் நிகழ்வு, கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடை பெற்றது. இது கோவை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ் ணன், துணை காவல் ஆணையர் சந்தீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு டிஜிட்டல் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தனர். இதனைத்தொடர்ந்து செய்தியா ளர்களிடம் காவல் ஆணையர் வி. பாலகிருஷ்ணன் பேசுகையில், கோவை மாநகர காவல் துறை சார் பில் போதை பொருள்களுக்கு எதி ரான விழிப்புணர்வு தொடர்பாக பார்க் இன்ஸ்டிடியூஷன் என்ற தனியார் அமைப்புடன் இணைந்து டிஜிட்டல் கையெழுத்து இயக்கம் துவங்கப்பட் டுள்ளது. இதில், கல்லூரி மாணவர் கள் பங்கேற்று இது குறித்து உறுதி மொழி எடுப்பதற்கு ஒரு வாய்ப்பாக உள்ளது என்றார். மேலும், கோவை மாநகரில் இரவு நேரங்களில் பணிக ளுக்கு செல்லும் பெண்களின் பாது காப்பு தொடர்பாக பல்வேறு நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இதனை, மேலும் அதிகபடுத்து வதற்கு பெண்களின் கருத்துக்களை கேட்டறிய டிஜிட்டல் முறையில் க்யூஆர் கோடு ஒன்றும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து அதில் கருத் துக்கள் தெரிவித்தால் அதுகுறித்து நடவடிக்கை எடுக்க உதவியாக இருக் கும். குழந்தைகள் மற்றும் பெண்க ளுக்கு எதிரான குற்றங்கள் புரிபவர் கள் மீதும் கடுமையான நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் அக்கா என்ற திட்டம் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்து வருகி றோம். மேலும், பள்ளிகளுக்குச் சென்று போலீசார் பாலியல் குற்றங்கள் போன்றவைகள் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஆனால், ஒரு சில தனியார் பள்ளிகள் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி காவலர் களை விழிப்புணர்வு ஏற்படுத்துவ தற்கு அனுமதிப்பதில்லை என புகார் கள் வருகிறது. பாலியல் குற்றங்கள் தொடர்பாக பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த காவலர்கள் வரும்பொழுது ஒத்துழைப்பு நல்க வேண்டும். சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் காவலர்கள் பலமுறை பள்ளிக்குச் சென்ற போதிலும் பள்ளி நிர்வாகிகள் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி காவல்துறையினரை தட் டிக் கழித்ததாக தெரிகிறது, தற்பொ ழுது அந்த பள்ளியில் பாலியல் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப் பதற்கு அனைத்து நடவடிக்கைக ளும் எடுக்கக் கூடிய கடமை அந்தந்த பள்ளி நிர்வாகத்திற்கு உள்ளது அதனை எடுக்க தவறினால் ஏதேனும் சம்பவங்கள் நிகழும் பொழுது அவர் கள் மீதும் நடவடிக்கை எடுக்கப் படும். புகார்கள் வந்தால் உடனடி யாக காவல் துறையினருக்கோ அல் லது மாவட்ட நிர்வாகத்திடமும் புகார் தெரிவிக்க வேண்டிய கடமை அந் தந்த பள்ளிகளுக்கு உள்ளது. அவ் வாறு அதனை சொல்வதற்கு தவறி னால் அந்த குற்றங்களை மறைப்ப தற்கு உதவுவதாக அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும், என் றார்.