districts

தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.37 லட்சம் வழங்க உத்தரவு!

நாமக்கல், அக்.29- தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம்,  பாதிக்கப்பட்ட வாடிக்கையானருக்கு ரூ.37 லட்சம் வழங்க வேண்டும் என  நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் உத் தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், புதுச்சத்தி ரம் அருகே உள்ள காரைக்குறிச்சி, செல்லியாயிபாளையத்தைச் சேர்ந்த வர் கண்ணுச்சாமி. இவர் கடந்த 2023 பிப்ரவரி முதல் வாரத்தில், நாமக்கல் லிலுள்ள தனியார் நிதி நிறுவனத் தில் (Indusind) வீடு கட்டுவதற்காக  ரூ.35 லட்சம் கடனாக பெற்றுள்ளார். கடன் நிலுவையில் இருக்கும் போது  இறந்து விட்டால், கடனை ஈடு செய் யும் வகையில் இன்சூரன்ஸ் பாலிசி  ஒன்றை எடுக்க வேண்டும் என்று நிதி  நிறுவனத்தினர் கூறியுள்ளனர். நிதி நிறுவனத்தின் மூலமாகவே தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் (ஐசிஐசிஐ ப்ருடன்சியல் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி) ஒன்றில் ரூ.1,69,529 செலுத்தி ஐந்தாண்டுகளுக்கு ரூ.35  லட்சத்துக்கு இன்சூரன்ஸ் பாலி சியை கண்ணுச்சாமி பெற்றுள்ளார். இந்நிலையில், திடீரென 2023 மார்ச்  இறுதியில் கண்ணுச்சாமி உடல் நலக் குறைவால் இறந்துவிட்டார். இன்சூ ரன்ஸ் நிறுவனத்தில் காப்பீட்டுத் தொகை ரூ.35 லட்சத்தை பெற்று தரு மாறு வங்கியிடம் கடிதம் மூலம் இறந் தவரின் மகன் கிருபாகர் கேட்டுள் ளார். கடிதம் வழங்கிய ஓரிரு தினங்க ளில் இன்சூரன்ஸ் நிறுவனத்தி லிருந்து இறந்தவர் மருத்துவ பரி சோதனையை செய்து கொள்ளாத தால் பாலிசி ரத்து செய்யப்பட்டு விட் டது என்பதால், காப்பீட்டுத் தொகை  வழங்க இயலாது என்று கிருபாக ருக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட் டுள்ளது. கண்ணுச்சாமி செலுத்திய இன்சூ ரன்ஸ் பிரிமியம் ரூ.1,69,529யை மட் டும் அவரது வங்கிக் கணக்குக்கு இன் சூரன்ஸ் நிறுவனம் அனுப்பி உள் ளது. இதனால், கடந்த 2023 நவம் பர் மாதத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் இறந்தவ ரின் மகன் கிருபாகர் வங்கியின்  மீதும், இன்சூரன்ஸ் நிறுவனத்தின்  மீதும் வழக்கு தாக்கல் செய்தார். இன் சூரன்ஸ் பிரீமியத்தைப் பெற்றுக் கொண்ட சில நாட்களிலேயே மருத் துவ பரிசோதனை செய்து அறிக் கையை தருமாறு கண்ணுச்சாமிக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் கடிதம் அனுப்பி இருந்தோம். ஆனால், அவர் மருத்துவ பரிசோதனை அறிக் கையை வழங்கவில்லை. இதனால் தான் அவரது பாலிசியை ரத்து செய்து  விட்டோம் என்று இன்சூரன்ஸ் நிறுவ னம் நீதிமன்றத்தில் வாதிட்டது. விசாரணை முடிவடைந்த நிலை யில், நாமக்கல் மாவட்ட நுகர்வோர்  நீதிமன்ற நீதிபதி வீ.ராமராஜ், உறுப்பி னர்கள் ஆர்.ரமோலா, என்.லட்சு மணன் ஆகியோர் வழங்கிய தீர்ப் பில், இன்சூரன்ஸ் நிறுவனத்தின் செயல்பாடு குறைபாடானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரிமீய பணத்தை பெறுவதற்கு முன்பு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்ற நிபந்தனை விதித்ததற்கான ஆதாரத்தையும், பிரிமீய பணத்தைப் பெற்ற சில  நாட்களில் மருத்துவப் பரிசோதனை  செய்ய வேண்டும் என்று தகவல்  வழங்கினோம் என்று கூறுவதற்கு,  அஞ்சலக ஒப்புகை அட்டை போன்ற  எந்த ஒரு ஆதாரத்தையும் இன்சூ ரன்ஸ் நிறுவனம் சமர்ப்பிக்க வில்லை. இன்சூரன்ஸ் பாலிசியை பெற்றவர் இறந்ததை வங்கியில் தெரி வித்த பின்னர், வங்கியால் இன்சூ ரன்ஸ் நிறுவனத்துக்கு தெரிவிக்கப் பட்ட சில நாட்களில் மருத்துவ பரி சோதனை செய்து கொள்ளாததால் பாலிசி ரத்து செய்யப்பட்டு விட்டதாக எஸ்எம்எஸ் மற்றும் கடிதம் அனுப்புவது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என்று தீர்ப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் மகனுக்கு காப் பீட்டுத் தொகை ரூ.35 லட்சத்தையும் இறப்பு குறித்து தெரிவிக்கப்பட்ட நாள் முதல் பணம் வழங்கப்படும் நாள் வரை காப்பீட்டுத் தொகைக்கு ஆண்டொன்றுக்கு 9 சதவிகித வட்டியையும் ஏற்பட்ட சிரமங்கள் மற் றும் மன உளைச்சலுக்கு இழப்பீ டாக ரூ.2 லட்சத்தையும் நான்கு வாரங்களுக்குள் கடன் வழங்கிய வங்கியில் இறந்தவரின் மகனுக்கு உள்ள கணக்கில் செலுத்த வேண் டும் என இன்சூரன்ஸ் நிறுவனத் திற்கு உத்தரவிட்டுள்ளது. இந்தப் பணத்தை வங்கியில் இறந்தவர் பெற்றுள்ள கடனுக்கு வரவு வைத்து  இறந்தவர் பெற்ற வீட்டுக் கடன் கணக்கை வங்கி முடித்துக் கொள்ள  வேண்டும் என்றும், மீதத்தொகை இருப்பின் அதனை இறந்தவரின் மக னுக்கு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.