districts

img

பேருந்து நிறுத்தத்தில் நிற்காத தனியார் பேருந்து சிறைப்பிடிப்பு

ஈரோடு, பிப்,16- ஈரோடு அருகே பேருந்து நிறுத்தத்தில் நிற்காத தனி யார் பேருந்தை பொதுமக்கள் சிறைப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோட்டில் இருந்து ராசிபுரம் நோக்கி சென்று கொண்டி ருந்த தனியார் பேருந்தில் ஏறிய பயணி ஒருவர், மடம் பேருந்து நிறுத்தத்திற்கு டிக்கெட் எடுத்துள்ளார். ஆனால், அதன்பின்னர் மடம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காது எனக்கூறி நடுவழியில் பேருந்தில் இருந்து அவரை இறக்கி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த பேருந்து மடம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது பொதுமக்கள் அதனை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடு பட்டனர். இது குறித்து தகவலறிந்த வெண்ணந்தூர் போலீசார் சம் பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதை யடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கி ருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.