districts

img

வீடற்றவர்களுக்கு அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் முன்னுரிமை

திருப்பூர், ஜூன் 9- அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் வீடுக ளில், வீடு மற்றும் வீட்டுமனை இல்லாத கிராமப் புற ஏழை எளிய மக்களுக்கு 50 சதவிகித வீடுகளை  ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பிஆர்.நடராஜன் வலியுறுத்தி னர்.  திருப்பூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் மாவட்ட ஊரக  வளர்ச்சி முகமை அலுவலகத்தில் திருப்பூர் நாடா ளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் தலைமை யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்,  ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர்  கயல்விழி, கோவை நாடாளுமன்ற  உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், ஈரோடு நாடாளு மன்ற உறுப்பினர்  கணேசமூர்த்தி, திருப்பூர் மாந கராட்சி மேயர்  தினேஷ் குமார், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்து ராஜ் உள்ளிட்ட பல்வேறு அரசு  துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  இதில், திருப்பூர் மாவட்டத்தில் செயல்ப டுத்தப் பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்த  ஆய்வு நடைபெற்றது.  முன்னதாக, கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் பேசுகையில், நகர்ப்புற வாழ் விட மேம்பாட்டு வாரியம் மூலம் கிராமப் புறங்க ளில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகிறது. இதில் வீடு மற்றும் வீட்டுமனை இல்லாத கிராமப்புற  ஏழை எளிய மக்களுக்கு 50 சதவிகித வீடுகளை  ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி னர். இந்த கோரிக்கையை கூட்டத் தீர்மானமாக   நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானத்தை மாநில  அரசுக்கு  அனுப்பிட முடிவு எடுக்கப்பட்டது. மேலும், திருப்பூர் மாவட்டத்தில் அரசு மேல்நி லைப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைவாக உள் ளது. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருப்பூர்  மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது. மாவட்டத்தில் உள்ள பொருத்தமான அரசு உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தர உயர்த்த  வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் கல்விக் கடன்  வழங்கும் முகாம் நடத்தப்பட்டு கல்விக் கடன் உரிய வர்களுக்கு வழங்கப்பட வேண்டும். மாவட்டத் தில் உள்ள அரசு மற்றும் தனியார் அலுவல கங்களில் விசாகா கமிஷன் பரிந்துரை படி குழு அமைத்திட சமூக நலத்துறை கண்காணிப்பு செய் திட வேண்டும் என்று பி.ஆர்.நடராஜன் எம்பி., வலி யுறுத்தினார்.  இதேபோன்று, திருப்பூர் மாவட்டத்தில் நடை பெற்று வரும் சாலை மேம்பாடு, குடிநீர் திட்டப்  பணிகள் உள்ளிட்ட பணிகளை  குறித்த காலத் தில் முடித்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, அதி காரிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக் கப்பட்டது.