திருப்பூர், நவ.4- தலைமுறை தலைமுறையாக கல்வி மறுக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள்தான் இன்று பட்டம் ஏற்கவுள்ள மாணவர்கள் என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற பட்டமேற்பு விழாவில் தெரிவித் தார். திருப்பூர் மாவட்டம், சிக் கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 50 ஆவது பட்டமேற்பு விழா வெள்ளியன்று நடைபெற்றது. இதில், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் களுக்கு பட்டச்சான்றிதழ்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், 50 ஆவது பட்ட மேற்பு விழா என்பது கல்லூரி வர லாற்றில் ஒரு மைல்கல். எதிர்கால வாழ்க்கை, வாழ்வாதார தேவை களுக்காக மேற்கொண்டு படிப்பது, படிப்புக்கேற்ற வேலை தேடுவது போன்ற எதிர்பார்ப்புகள் இருக்கும்.
ஆனால் இத்தகைய எதிர்பார்ப்பு கள் தனிநபர் மேம்பாடு சார்ந்தது. சந்தை அப்படித்தான் உங்களை எதிர்பார்க்கிறது. இன்று உங்கள் முன் உள்ள கேள்வி சந்தை தீர் மானித்துள்ள பண்புகளை கொண்ட நுகர்வோரா? அல்லது சுயசிந்தனை, சுயமரியாதை கொண்ட கண்ணியமிக்க மனிதரா? இந்த கேள்விக்கான விடை தான் நாளைய இந்தியாவை தீர்மா னிக்கப் போகிறது. இங்கு பட்டம் பெற்ற பெரும்பா லானோர் பொருளாதார நெருக்கடி யால் தத்தளிக்கும் குடும்பங்களில் இருந்து வந்துள்ளீர்கள். மேலும் ஏதாவதொரு வகையான ஒடுக்கு முறைகளுக்கு உள்ளானவர்களே. அதில் பெண்கள் இன்றைய தேதி வரை ஆண்களை சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டுள்ளனர். பெண்களுக்கான அனைத்து முடிவுகளையும் ஆண் களே மேற்கொள்கின்றனர். பெண்கள் உரிமை மனித உரிமையின் அங்கமாக பார்க்கப் படுவதில்லை. பாலின சமத்து வத்தை சமூக சமத்துவத்தை ஏற்றுக்கொள்ளாத ஒரு சமூகம் எப்படி வளர்ச்சி பெற்ற நாகரிக மான சமூகமாக தன்னைக்கூறிக் கொள்ள முடியும்.
கல்லூரி கல்வி ஒருவரின் சமூக சிந்தனையில் எந்தவித தாக்கத்தை யும் ஏற்படுத்தவில்லை என்றால் உண்மையிலேயே கற்றல் செயல் பாடு நிகழ்ந்துள்ளதா? என்ற கேள்வி எழுகிறது. தலைமுறை, தலை முறையாககல் விமறுக்கப்பட்ட சமூகத்தில் சமநிலை மறுக்கப் பட்டு, பொருளாதாரத்தில் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டு பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் வாழ்க் கையை நடத்த போராடிக் கொண்டிருக்கும் கல்வி மறுப்புக் குள்ளான அனைவரின் பிரதிநிதி கள்தான் இன்று பட்டம் ஏற்கவுள்ள நீங்கள். இன்று பட்டம் ஏற்க உள்ள வர்களை இனி யாரும் சாதி, சமயம் என்ற குறுகிய வட்டங்க ளுக்குள் அடைத்துவிட முடியாது. மூட நம்பிக்கைகள், சமூக பிரிவி னைகள், பாலின பாகுபாடுகள் போன்ற அனைத்திலிருந்தும் விடு தலை பெற்ற முழுமையான சுதந்திர மனிதர்களாக பட்டம் பெற்ற சிக் கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர் என்ற ஒற்றை அடையா ளத்தோடு. உலகை மாற்ற உலகி லுள்ள அனைவருக்கும் மகிழ்ச் சியை மட்டுமே நிலைக்க செய்திட உங்களால் இயன்ற அனைத்தை யும் செய்யும், சாதியற்ற, சமய மற்ற முழு மனிதர்களாக சமூகத் திற்கு கால் வைக்கிறீர்கள்.
குமரனின் தியாகம் யாருக் காக சாதிக்காகவா, மதத்திற் காகவா? இமயம் முதல் குமரி வரை விரிந்து கிடக்கும் இந்தியா வின் அனைத்து மக்களுக்கு மானதே திருப்பூர் குமரனின் தியாகம். விடுதலை என்பது சமத்துவத்திற்கானது. இன்னொரு வரை ஒடுக்குவதோ மற்றவர்களை தனக்கு கீழானவர் களாக பார்ப்பதோ விடுதலைக் கான பொருள் அல்ல. காரல் மார்க்சும், ஏங்கல்சும் முன்வைத்த பொதுவுடமை கோட்பாட்டிற்கும், புத்தரின் சிந்தனைக்கும் உள்ள ஒற்றுமையை அண்ணல் அம்பேத்கர் விளக்குகிறார். சமத்துவம் அடைய கல்வி மிகவும் அவசியம். கல்வி அனைவ ருக்கும் சமமாக கிடைக்க வேண்டும். கல்வி தனியாரிடம் முழு மையாக சென்றுவிட்டால் எத் தனை நபர்களால் உயர்கல்விக்கு வர இயலும். அரசு கல்லூரிகளில் சுயநிதிப்பிரிவுகள் தொடங்கப் பட்டால் நம்மில் எத்தனை நபர் களால் கல்வி கட்டணம் செலுத்தி படிக்க முடியும். நமக்கு கிடைத்த கல்வி அடுத்த தலைமுறைக்கு கிடைக்க வேண்டாமா?. பனி ரெண்டாம் வகுப்பு மதிப்பெண் உயர்கல்விக்கான தகுதியில்லை. தேசிய அளவில் நடக்கும் நுழைவுத் தேர்வில் தரப்படும் மதிப்பெண்கள் தான் படிப்பிற்கான தகுதி. அத் தகைய நுழைவுத்தேர்வு மூலம் தான் பி.ஏ தமிழ், பி.ஏ வரலாறு உள்ளிட்ட எந்த பட்டபடிப்பிலும் சேர முடியும் என்றால் நம்மில் எத் தனை பேர் கல்லூரிக்குள் கால் வைக்க முடியும்.
ஜனநாயகம் வலுப்பெற கல்வி அவசியம். கல்வியும், ஜனநாய கமும் அச்சுறுத்தலுக்கு உள்ளா னால் விடுதலையும், சமத்துவமும் அர்த்தமற்றதாகிவிடும். நமது அடுத்த தலைமுறையின் கல்விக் காக நமது அரசமைப்பு சட்டத்தின் முகப்புரை முன்வைக்கும் மக்கள் இறையாண்மை கொண்ட சமய சார்பற்ற, சமதர்ம ஜனநாயக குடியரசாக இந்தியா தொடர்ந்து நீடித்து வலுப் பெற நம்மை நாமே அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். எத்தனை இடையூ றுகள் வந்தாலும் கல்வியையும், ஜனநாயகத்தையும் காப்பது நமது கடமை என்று முன்னிருக்கும், இந்திய தலைவர்களாக இன்று பட்டம் பெற்றுள்ள திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி வளர்த்தெ டுத்த நீங்கள் அனைவரும் திகழ வேண்டும், என்றார்.