திருப்பூர், நவ.4- தலைமுறை தலைமுறையாக கல்வி மறுக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள்தான் இன்று பட்டம் ஏற்கவுள்ள மாணவர்கள் என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு திருப் பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற பட்டமேற்பு விழாவில் தெரிவித் த்தார். திருப்பூர் மாவட்டம், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 50 ஆவது பட்டமேற்பு விழா வெள்ளியன்று நடைபெற்றது. இதில், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பட்டச் சான்றிதழ்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், 50 ஆவது பட்டமேற்பு விழா என்பது கல்லூரி வரலாற்றில் ஒரு மைல்கல். எதிர்கால வாழ்க்கை, வாழ்வாதார தேவைகளுக்காக மேற்கொண்டு படிப்பது, படிப்புக்கேற்ற வேலை தேடுவது போன்ற எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனால் இத்தகைய எதிர்பார்ப்பு கள் தனிநபர் மேம்பாடு சார்ந்தது. சந்தை அப்ப டித்தான் உங்களை எதிர்பார்க்கிறது. இன்று உங்கள் முன் உள்ள கேள்வி சந்தை தீர்மானித் துள்ள பண்புகளை கொண்ட நுகர்வோரா? அல்லது சுயசிந்தனை, சுயமரியாதை கொண்ட கண்ணியமிக்க மனிதரா? இந்த கேள்விக்கான விடை தான் நாளைய இந்தி யாவை தீர்மானிக்கப் போகிறது.
இங்கு பட்டம் பெற்ற பெரும்பாலானோர் பொருளாதார நெருக்கடியால் தத்தளிக்கும் குடும்பங்களில் இருந்து வந்துள்ளீர்கள். மேலும் ஏதாவதொரு வகையான ஒடுக்கு முறைகளுக்கு உள்ளானவர்களே. அதில் பெண்கள் இன்றைய தேதி வரை ஆண்களை சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். பெண்களுக்கான அனைத்து முடிவுகளையும் ஆண்களே மேற்கொள்கின்றனர். பெண்கள் உரிமை மனித உரிமையின் அங்கமாக பார்க்கப் படுவதில்லை. பாலின சமத்துவத்தை, சமூக சமத்துவத்தை ஏற்றுக்கொள்ளாத ஒரு சமூகம் எப்படி வளர்ச்சி பெற்ற நாகரிகமான சமூகமாக தன்னைக்கூறிக் கொள்ள முடி யும். கல்லூரி கல்வி ஒருவரின் சமூக சிந்தனை யில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை என்றால் உண்மையிலேயே கற்றல் செயல்பாடு நிகழ்ந்துள்ளதா? என்ற கேள்வி எழுகிறது. தலைமுறை, தலைமுறையாககல் விமறுக்கப்பட்ட சமூகத்தில் சமநிலை மறுக் கப்பட்டு, பொருளாதாரத்தில் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டு பல்வேறு சிக்கல்க ளுக்கு மத்தியில் வாழ்க்கையை நடத்த போராடிக் கொண்டிருக்கும் கல்வி மறுப்புக் குள்ளான அனைவரின் பிரதிநிதிகள்தான் இன்று பட்டம் ஏற்கவுள்ள நீங்கள்.
இன்று பட்டம் ஏற்க உள்ளவர்களை இனி யாரும் சாதி, சமயம் என்ற குறுகிய வட்டங்க ளுக்குள் அடைத்துவிட முடியாது. மூட நம்பிக் கைகள், சமூக பிரிவினைகள், பாலின பாகுபா டுகள் போன்ற அனைத்திலிருந்தும் விடு தலை பெற்ற முழுமையான சுதந்திர மனிதர்க ளாக பட்டம் பெற்ற சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர் என்ற ஒற்றை அடையாளத் தோடு. உலகை மாற்ற உலகிலுள்ள அனைவ ருக்கும் மகிழ்ச்சியை மட்டுமே நிலைக்க செய்திட உங்களால் இயன்ற அனைத்தையும் செய்யும், சாதியற்ற சமயமற்ற முழு மனிதர்க ளாக சமூகத்திற்கு கால் வைக்கிறீர்கள். குமரனின் தியாகம் யாருக்காக? சாதிக் காகவா, மதத்திற்காகவா? இமயம் முதல் குமரி வரை விரிந்து கிடக்கும் இந்தியாவின் அனைத்து மக்களுக்குமானதே திருப்பூர் குமரனின் தியாகம். விடுதலை என்பது சமத்து வத்திற்கானது. இன்னொரு வரை ஒடுக்கு வதோ மற்றவர்களை தனக்கு கீழானவர் களாக பார்ப்பதோ விடுதலைக்கான பொருள் அல்ல. காரல் மார்க்சும் ஏங்கல்சும் முன் வைத்த பொதுவுடமை கோட்பாட்டிற்கும், புத்தரின் சிந்தனைக்கும் உள்ள ஒற்று மையை, அண்ணல் அம்பேத்கர் விளக்கு கிறார்.
சமத்துவம் அடைய கல்வி மிகவும் அவசி யம். கல்வி அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும். கல்வி தனியாரிடம் முழுமையாக சென்றுவிட்டால் எத்தனை நபர்களால் உயர் கல்விக்கு வர இயலும். அரசு கல்லூரிகளில் சுயநிதிப்பிரிவுகள் தொடங்கப்பட்டால் நம் மில் எத்தனை நபர்களால் கல்வி கட்டணம் செலுத்தி படிக்க முடியும். நமக்கு கிடைத்த கல்வி அடுத்த தலைமுறைக்கு கிடைக்க வேண்டாமா? பனிரெண்டாம் வகுப்பு மதிப் பெண் உயர்கல்விக்கான தகுதியில்லை. தேசிய அளவில் நடக்கும் நுழைவுத்தேர் வில் தரப்படும் மதிப்பெண்கள் தான் படிப்பிற் கான தகுதி. அத்தகைய நுழைவுத்தேர்வு மூலம் தான் பி.ஏ தமிழ், பி.ஏ வரலாறு உள் ளிட்ட எந்த பட்டபடிப்பிலும் சேர முடியும் என் றால் நம்மில் எத்தனை பேர் கல்லூரிக்குள் கால் வைக்க முடியும். ஜனநாயகம் வலுப்பெற கல்வி அவசியம். கல்வியும், ஜனநாயகமும் அச்சுறுத்தலுக்கு உள்ளானால் விடுதலையும், சமத்துவமும் அர்த்தமற்றதாகிவிடும். நமது அடுத்த தலை முறையின் கல்விக்காக நமது அரசமைப்பு சட் டத்தின் முகப்புரை முன்வைக்கும் மக்கள் இறையாண்மை கொண்ட சமயசார்பற்ற, சமதர்ம ஜனநாயக குடியரசாக இந் தியா தொடர்ந்து நீடித்து வலுபெற நம்மை நாமே அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். எத்தனை இடையூறுகள் வந்தாலும் கல்வி யையும், ஜனநாயகத்தையும் காப்பது நமது கடமை என்று முன்னிருக்கும், இந்திய தலை வர்களாக இன்று பட்டம் பெற்றுள்ள திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி வளர்த்தெடுத்த நீங்கள் அனைவரும் திகழ வேண்டும், என்றார்.