districts

img

விலைவாசிக்கு தகுந்தாற்போல் விலை நிர்ணயம் - விவசாயிகள் வலியுறுத்தல்

சேலம், மார்ச் 15- தற்போதுள்ள விலைவாசிக்கு தகுந்தாற்போல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என பட்டுக்கூடு உற்பத்தி விவ சாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச்சங் கத்தினர், சேலம் மாவட்டத்தில் உள்ள பட்டு வளர்ச்சி துறை  இயக்குனர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். இதன் பின் சங்கத்தின் தலைவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகை யில், கர்நாடகா மாநிலத்தில் அதிகளவில் பட்டுக்கூடு விற்பனை மற்றும் உற்பத்தி நடைபெறுகிறது. அதேபோல் தமிழ்நாட்டிலும் நடைபெற பட்டு வளர்ச்சித்துறை உரிய நட வடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, தரமான  முட்டை என்கிற உத்திரவாத சான்றுடன் கிடைக்க வழிவகை  செய்ய வேண்டும். இளம்புழு மையத்திலிருந்து விவசாயிக ளுக்கு கொடுக்கப்படும் முன்பு தரம், அடர்த்தி, எடை போன்ற  முக்கிய பரிசோதனையுடன் முட்டை விலை, வளர்ப்பு கூலி,  போக்குவரத்துக் கூலி என கட்டண ரசீதுடன் சோதனை சான்றும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அனைத்து  அங்காடிகளிலும் உடனடியாக பணம் வழங்கப்படும் என இயக்குனர் உத்தரவாதம் அளித்தும், தற்போது வரை நடை முறைப்படுத்தவில்லை. அதில் முக்கிய கவனம் செலுத்தி அனைத்து அங்காடிகளிலும் உடனடியாக பணம் கிடைக்க  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முறைகேடுகளை ஒழித்து விவசாயிகளுக்கு அடிப்படை  விலையை உறுதிப்படுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கூடு விலை நிர்ணயம் செய்யும்போது அடிப்படை விலை, பழைய விலைக்கு பதிலாக புதிய விலை, தற்போதைய விலைவாசிக்கு தகுந்தாற்போல் மாற்றி அமைத்து விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் அனைத்து அங் காடிகளிலும் அடிப்படை வசதிகள் செய்யப்படாத நிலையே  உள்ளது. முக்கியமாக பெண் விவசாயிகளுக்கு பாதுகாப்பும்,  சுகாதாரமும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது, என்றனர். முன்ன தாக, இந்நிகழ்ச்சியில் பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச்சங்க மாநிலத் தலைவர் எம்.செல்வராஜ், மாநிலச் செய லாளர் என்.பொன்னுசாமி, மாநிலப் பொருளாளர் வி.கனக ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.