districts

உணவகங்களில் விலை குறித்த தகவல் பலகை

உதகை, மே 5- நீலகிரி மாவட்டங்களில் உள்ள உணவகங்களில் விலை குறித்த தக வல் பலகையை  வைக்க வேண்டு மென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  நீலகிரி மாவட்டம் சுற்றுலா தல மாக உள்ளதால் பல்வேறு மாநிலங் கள், மாவட்டங்களில் இருந்தும் உத கைக்கு அதிகளவில் சுற்றுலா பயணி கள் வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பய ணிகளின் வருகை அதிகளவில் உள் ளன. இந்நிலையில், உதகையில் உள்ள உணவகங்களில் கூடுதல் விலையில் விற்பனை செய்யப்படுவ தாக சுற்றுலா பயணிகள் புகார் தெரி விக்கின்றனர். நீலகிரி மாவட்ட மக்கள் சுற்றுலா பயணிகளை சார்ந்து வாழ்ந்து வருகின்றனர். அதிக பயணி கள் வரும் விதத்தில் சுற்றுலா துறை யும், மாவட்ட நிர்வாகமும் பல திட் டங்களை கொண்டு வந்துள்ளது. ஆனால், சில உணவக உரிமையாளர் களின் பேராசையால் கூடுதல் விலை யும், தரமற்ற உணவும் விநியோகிக் கப்படுகிறது.  வெளியூர் மக்கள் என்றால் ஒரு  விலையும், உள்ளூர் மக்கள் என்றால்  ஒரு விலையும் என முகம் பார்த்து சிலர் கொள்ளையடிப்பதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இதனால், நேர் மையாக வியாபாரம் செய்பவர்க ளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் அவப்பெயர்  ஏற்பட்டுள்ளது. இத்த கைய செயல்களில் ஈடுபடும் உண வக உாரிமையாளர்கள் மீது நடவ டிக்கை  எடுத்தால் மட்டுமே சுற்றுலா பயணிகளை வருகையை அதிகப் படுத்த முடியும். மேலும், விலை குறித்த தகவல் பலகையை ஒவ் வொரு உணவகங்களிலும் வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், உதகையில் உள்ள தங்கும் விடுதி மற்றும் காட்டேஜ் கட் டணம் அதிகளவில் வசூலிக்கப்படுகி றது. இதனை மாவட்ட நிர்வாகம் கண் காணித்து முறைப்படுத்திட வேண் டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.