நாமக்கல்.ஏப்.23- பஞ்சாலைகளில் நடைபெறும் பாலியல் குற்றங்களை தடுத்து நிறுத்த, தொழிலாளர் துறையும் குழந்தைகள் நலத்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் ஒன்றியம் வெப்படை அருகே உள்ள குமரகிரி பஞ்சாலை யில் 16 வயது இளம் பெண்ணை பாலி யல் பலாத்காரம் செய்த குற்றவாளி கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு கொத்தடிமைகளாக பணியாற்றி வரும் இளம்பெண்களை மீட்க வேண்டும். இதுதொடர்பாக தொழிலாளர் துறை மற்றும் குழந்தை கள் நலத்துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து சம்பந்த பட்ட ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சாலை களில் பணிபுரியும் பெண் தொழிலாளர் களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு நாமக்கல் மாவட்ட பஞ்சாலைத் தொழி லாளர் சங்கம் சார்பில் பள்ளிபாளை யம் வெப்படை நால் ரோட்டில் ஆர்ப் ்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாமக் கல் மாவட்ட பஞ்சாலைத் தொழிலா ளர் சங்க மாவட்ட துணை செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எஸ்.தனபால். மாவட்ட பொருளாளர் வீரமுத்து. சிஐ டியு சிமெண்ட் ஆலை சங்க தலைவர் பி.பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.