districts

img

“பசுமை சாம்பியன் விருது” கோவை ஆட்சியர் வழங்கினார்

கோவை, ஜூன் 6- சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பாற்றிய கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 3 நபர்க ளுக்கு ‘பசுமை சாம்பியன் விரு தினை” மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் வழங்கினார். தமிழக அரசின் சிறப்பு திட்டமாக பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத் தின் கீழ், அடுத்த 10 ஆண்டுகளில்  காடு மற்றும் மரங்களின் பரப்ப ளவை 23.8 சதவிகிதத்திலிருந்து 33 சதவிகிதமாக உயர்த்தப்பட வுள்ளது. இத்திட்டத்தின் கீழ்  கோவை மாவட்டத்தில், மாவட்ட வன அலுவலகம், கோவை வனக் கோட்டத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வனவியல் விரிவாக்க கோட்ட நாற்றங்கால்கள் மூலம் விவசாய நிலங்கள், தரிசு நிலங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு நிலங்களில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லட்சத்து 40 ஆயி ரம் எண்ணிக்கையில் தேக்கு, மகா கனி, மலைவேம்பு, செம்மரம், சந்த னம், வேங்கை, வேம்பு, புங்கன், புளி, பாதாம் மற்றும் நாவல் போன்ற மரக்கன்றுகள் வனவியல் விரி வாக்க நாற்றங்கால்கள் மூலம் உற் பத்தி செய்யும் பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் இத்திட் டத்தை சிறப்பாக செயல்படுத்தி, மாவட்டத்தின் வனப்பரப்பை அதி கரிக்கச் செய்து, பசுமையை ஏற்ப டுத்தும் நோக்குடன் மாவட்ட நிர் வாகத்துடன் இணைந்து வனத் துறை முழுவீச்சில் செயல்பட்டு வரு கிறது. அந்தவகையில், உலக சுற் றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ் வனத்துறையின் சார்பில் கோவை வனவியல் விரி வாக்க கோட்டம் மூலம் இலவசமாக மரக்கன்றுகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வழங்கினார்.

மேலும், தமிழ்நாடு  அரசின் சுற் றுச்சூழல், காலநிலை மாற்றம் மற் றும் வனத்துறை சார்பாக சுற்றுச் சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப் பாற்றியவர்களுக்காக ‘பசுமை  சாம்பியன் விருது” வழங்கப்படுகின் றது. இதன்படி மாநிலத்தில் 100 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு வருக்கும் ரூ. 1 லட்சம் பரிசு தொகை யாக வழங்கப்படுகின்றது. இவ்விரு திற்குரியோர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு வால் தேர்ந்தெடுக்கப்பட்டு அர சிற்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன டிப்படையில், பசுமை சாம்பியன் விருதுக்கு கோவை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அத்தப் பக்கவுண்டன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஜி.தங்கவேல், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு நிறு வனர் மணிகண்டன், என்ஜிஎன்ஜி மேல்நிலைப்பள்ளி தலைமையா சிரியர் ஆகிய 3 நபர்களுக்கு விருது களையும், தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வழங்கினார். மேலும், கிளிகளின் இறக்கை களை வெட்டி அவற்றை வைத்து, தொழில் செய்பவர்களிடமிருந்து கிளிகளை வனத்துறையினரால் மீட்கப்பட்டு, அக்கிளிகளுக்கு இறக்கை முழுமையாக வளர 50  நாட்கள் தனியாக வைத்து பாது காக்கப்பட்ட கிளிகளை ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கூண்டியிலிருந்து சுதந்திரமாக பறக்கவிட்டார். முன்ன தாக, இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், உதவி வன பாதுகாவலர்கள் செந்தில், தினேஷ், வனசரகர்கள் அருண், ஜெயசந்திரன் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.