திருப்பூர், டிச. 23 - பெருமாநல்லூர் தாய், சேய் மகப்பேறு மருத்துவமனையில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வழங்க வேண்டிய ஊட்டசத்து பெட்டகம் வழங்காமல் அலைக் கழிக்கப்படுவதாக கர்ப்பிணிகள் குற்றம்சாட்டி உள்ளனர். திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருமா நல்லூரில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு மருத்துவமனை அமைந் துள்ளது. பெருமாநல்லூர் சுற்றி யுள்ள பாண்டியன் நகர், கூத்தம் பாளையம், கணக்கம்பாளையம், அயம்பாளையம், பாலசமுத்திரம், பொடாரம்பாளையம், ஈட்டிவீரம் பாளையம், அப்பியாபாளையம், தட்டாங்குட்டை, பொங்கு பாளையம் உட்பட பல பகுதிகளில் உள்ள கர்ப்பிணி பெண்கள் இந்த தாய், சேய் மருத்துவமனையை சார்ந்து உள்ளார்கள்.
இந்நிலையில், வாரம் ஒரு முறை வெள்ளியன்று எடுக்கப் படும் ஜிசிடி, பரிசோதனை செய்யும் ஆய்வக தொழில்நுட்ப பணி யாளர் வெள்ளியன்று வரவில்லை. இதனால் கர்ப்பிணிகள் பரி சோதனை செய்யாமல் திரும்பிச் சென்றனர். மேலும், இரண்டு மாதங் களுக்கு ஒரு முறை கர்ப்பிணி களுக்கு வழங்க வேண்டிய ஊட்டச் சத்து பெட்டகம் கடந்த நான்கு மாதங்கள் ஆகியும் வழங்கப்ப டாமல் உள்ளது. இது குறித்து செவிலியர்களிடம் கேட்டால் முறை யாக பதில் சொல்லாமல் தகாத முறையில் பேசி அலைக்கழிப்ப தாக பரிசோதனைக்கு வந்த பெண்கள் தெரிவித்தனர். இது குறித்து நிலைய மருத்துவ அலுவலரிடம் கேட்டபோது, ஊட் டச்சத்து பெட்டகம் வியாழனன்று தான் வந்தது. செவ்வாய்க் கிழமைக்குள் கர்ப்பிணி பெண் களுக்கு விநியோகிக்கப்படும். மேலும், பெருமாநல்லூரில் மட்டும் 10 பஞ்சாயத்துகள் உள்ளது. அனைத்து பஞ்சாயத்துக்கும் தனித்தனியாக கிராமப்புற சுகா தார செவிலியர்கள் உள்ளார்கள். கிராமங்களிலும் மகப்பேறு சிகிச்சை பெற்று வரும் பெண் களுடன் நேரடி தொடர்பில் இருப் பார்கள். மாவட்டத்தில் உள்ள அனைத்து பரிசோதனை கூட தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் இருந்ததால் ஜிசிடி பரிசோதனை செய்ய முடிய வில்லை. இந்த தகவல் கர்ப்பிணி பெண்களுக்கு சென்றடையாதது குறித்து விசாரிக்கப்படும். மீண்டும் இது போல் சம்பவம் நிகழாது என் றார்.