சேலம், மார்ச் 12- ஊட்டச்சத்துப் பெட்டகம் பெறுவதற்காக வந்த கர்பிணிகள் ஐம்பதுக்கும் மேற்பட்ட வர்கள் 4 மணி நேரமாக காத்திருந்து பெட் கத்தை வாங்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சேலம் மாநகராட்சி சார்பில், “வருமுன் காப்போம்” திட்டத்தின் அடிப்படையில் மருத்துவ முகாம் ஞாயிறன்று சேலம் மணக் காடு அரசு பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. இந்த முகாமிற்கு மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் துவக்கி வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்ட கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டி ருந்தது. இதையடுத்து ஊட்டச்சத்து பெட்ட கம் பெறுவதற்காக சுமார் 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் மணக்காடு அரசுப்பள்ளி முன்பு திரண்டனர். காலை 9 மணி முதல் காத்திருந்த கர்ப்பிணிகள் மூன்று மணி நேரமாகியும் முகாமை துவக்கி வைப்பதற்காக மேய ரும், சட்டமன்ற உறுப்பினரும் வரவில்லை. இதன்பின் கர்ப்பிணிகள் காத்திருப்பதாக முகாமிமிருந்த மாநகர் நகர்நல அதிகாரிகள் மேயரை தொடர்பு கொண்டு பேசியபோது, வருவதற்கு தாமதமாகும்” என்று தெரிவித்த தாக கூறப்படுகிறது. மேலும் ஒரு மணி நேரம் கர்ப்பிணிகள் காத்திருந்த நிலையில் அதிகாரிகள், “மேய ரும், சட்டமன்ற உறுப்பினரும் நிகழ்ச்சிக்கு வர இயலாது. எனவே, அனைவரும் வீட்டுக்கு செல்லவும் எனவும், ஊட்டச்சத்து பெட்ட கம் தங்களது வீடுகளுக்கு வந்து தருவ தாக கூறினர்”. இதுகுறித்து கர்ப்பிணிகள் கூறுகையில், ஊட்டச்சத்து பெட்டகம் வீட்டிற்கு வந்து தரப் படும் என தெரிவித்திருந்தால் நாங்கள் நான்கு மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. ஒரே இடத்தில் வெகு நேரம் அமர முடியாமல் இருந்ததாகவும், எதற்காக வரவழைத்து காக்க வைத்தார்கள் என்றும் தெரியவில்லை. நிகழ்ச்சிக்கு மாநகர மேய ரும், சட்டமன்ற உறுப்பினரும் வரமாட்டார் கள் என்று முன்பே சொல்லியிருந்தால் இந்த கடும் வெயிலில் நாங்கள் காத்திருக்க தேவை இருந்திருக்காது, என வேதனையுடன் தெரி வித்தனர்.