districts

img

பட்டு உற்பத்தியாளர்களிடம் பணம் பறிக்க முயன்ற சாமியார் கைது

மேட்டுப்பாளையம், ஜன.9- சிறுமுகை அருகே கைத்தறி பட்டு உற்பத்தியாளர்களிடம், அரசு அதிகாரி என்று பணம் பறிக்க முயன்று சாமி யாரை காவல் துறையினர் கைது செய் தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் அடுத்துள்ள சிறுமுகை பகுதி யில் கிச்சகத்தியூர் என்னும் கிராமத்தில் தன்னை சாமியார் என கூறி ஆசிரமம் வைத்து நடத்தி வருபவர் ராஜ்குமார். இவர் சிறுமுகையில் உள்ள கைத்தறி பட்டு உற்பத்தியாளர்களிடம் நீங்கள் கைத்தறி பட்டு என்ற பெயரில் போலி பட்டு சேலைகளை விற்பனை செய்வ தாகவும், தான் அகில இந்திய நுகர் வோர் பாதுகாப்பு அதிகாரி என கூறி  அடிக்கடி பலரையும் மிரட்டி வந்துள்ள தாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமுகையில் உள்ள நாகராஜ் என்ற கைத்தறி பட்டு வியாபாரியிடம் ராஜ் குமார், தான் ஒன்றிய அரசு அதிகாரி எனவும், உங்கள் கடையில்  போலி பட்டு சேலைகளை விற்பதாக கூறி தான் நடவடிக்கை எடுக்காமல் இருக்க மூன்று லட்ச ரூபாய் வரை பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.  இதுகுறித்து சிறுமுகை அனைத்து  கைத்தறி பட்டு சேலை உற்பத்தி மற் றும் விற்பனையாளர் சங்கம் சார்பில் நாகராஜ் அளித்த புகாரின் அடிப்படை யில், சிறுமுகை காவல் துறையினர் சாமியார் ராஜ்குமாரை கைது செய்த னர். மேலும், மத்திய அரசு அதிகாரி என கூறி மிரட்டியது, மத்திய அரசின் பெயரை தவறுதலாக பயன்படுத்தி யது, மோசடி செய்தது என மூன்று பிரி வின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது  செய்துள்ள காவல் துறையினர், ராஜ் குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.