நாமக்கல், ஆக. 23- கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன் கொலை செய்த சம்பவத்தை கண்டித்து, நாமக்கல் மாவட்டத் தில் வெள்ளியன்று கல்லூரி மாணவிகள் பேரணி ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் துன்புறுத்த லுக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண் டித்து, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், தனியார் தொண்டு நிறுவனத்தினர் சார்பில் கண்டனப் பேரணி நடைபெற் றது. அண்ணா சிலை அருகில் இருந்து துவங்கிய பேரணி, வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, வழியாக மீண்டும் அண்ணா சிலை அருகில் நிறைவடைந் தது. பேரணியில் சென்றவர்கள் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும், பெண் மருத்துவர் படுகொலைக்கு நீதி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினர். இதில், திருச்செங்கோடு நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ் பாபு தலைமை வகித்தார். நகர் மன்ற உறுப்பினர்கள் மகேஸ் வரி, செல்வி ராஜவேல், புவனேஸ்வரி உலகநாதன், சண்முகவடிவு,ராதா சேகர்,செல்லம்மாள் தேவராசன், திவ்யா வெங்கடேஸ்வரன், சம்பூரணம், ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.