districts

img

நல்ல நிலையில் உள்ள தரைத்தளத்தை இடித்து ஊதாரித்தனம்

கோவை, ஆக. 26- ரயில் நிலையத்தை மேம்படுத் துகிறோம் என்கிற பெயரில், வட கோவை ரயில் நிலையத்தில் நல்ல  நிலையில் உள்ள தரைத்தளத்தை அடியோடு பெயர்த்தெடுத்துவிட்டு புதிய தரைத்தளம் அமைக்க திட்ட மிடும் ரயில்வேத்துறையின் ஊதாரித் தனமான செலவுகளுக்கு மக்கள் பணம் வீணாவதாக கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித் திருப்பதாவது, ரயிலில் பயணிக் கும் மூத்த குடிமக்களுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்கனவே வழங் கப்பட்டு வந்த சலுகைகளை ஒன் றிய பாஜக அரசு பறித்துக்கொண் டது. இதனால் பல லட்சம் ரூபாய்கள் லாபம் வந்துள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் வியாக்கானம் தெரிவிக்கிறார்.  இப் படி மிச்சம் பிடிக்கிற மக்கள் பணத்தை ஊதாரித்தனமாக ரயில்வேத்துறை  நல்ல நிலையில் உள்ள கட்டங்களை இடித்து, புதிய கட்டுமானங்களுக்கு திட்டமிடுகிற செயல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதன்தொடர்ச்சியாகவே, வட கோவை ரயில் நிலையத்தில் உள்ள தரைத்தளங்கள் தற்போது இடிக்கப் பட்டு வருகிறது. கடந்த ஆறு மாதங் களுக்கு முன்புதான் வடகோவை ரயில் நிலையில் பலமான காங்ரீட்டு களை கொண்டு தரைத்தளம் அமைக் கப்பட்டது. மேலும், இங்குள்ள பெரும்பாலன கட்டடங்கள் நல்ல  நிலையில் உள்ளது. இந்நிலையில், ஆறு மாதங்களுக்கு முன்பு பல  லட்சக்கணக்கான ரூபாய் செலவு  செய்து அமைக்கப்பட்ட தரைத் தளம் தற்போது முழுவதுமாக பெயர்த்தெடுத்து இடிக்கும் பணி களை ரயில்வே பொறியியல் துறை  மேற்கொண்டு வருகிறது. ரயில்  நிலையத்திற்கு, ரயில் பயணிக ளுக்கு தேவையான அத்தியாவசிய மான பணிகளை செய்ய மறுத்து விட்டு, நல்ல நிலையில் இருப்பவை களை இடிப்பது என ஊதாரித்தன மான செலவுகளை செய்வதை ஒரு போதும் ஏற்க முடியாது.  தென்னக ரயில்வே நிர்வாகம் உடனடியாக தலையிட வேண்டும். மேலும் மக்கள் பணத்தை வீணடிக் கிற ரயில்வே பொறியியல் துறை  அதிகாரிகள் மீது உரிய விசாரணை  நடத்தி நடவடிக்கை எடுக்க வேண் டும் என தெரிவித்துள்ளார்.கோவை, ஆக. 26- ரயில் நிலையத்தை மேம்படுத் துகிறோம் என்கிற பெயரில், வட கோவை ரயில் நிலையத்தில் நல்ல  நிலையில் உள்ள தரைத்தளத்தை அடியோடு பெயர்த்தெடுத்துவிட்டு புதிய தரைத்தளம் அமைக்க திட்ட மிடும் ரயில்வேத்துறையின் ஊதாரித் தனமான செலவுகளுக்கு மக்கள் பணம் வீணாவதாக கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித் திருப்பதாவது, ரயிலில் பயணிக் கும் மூத்த குடிமக்களுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்கனவே வழங் கப்பட்டு வந்த சலுகைகளை ஒன் றிய பாஜக அரசு பறித்துக்கொண் டது. இதனால் பல லட்சம் ரூபாய்கள் லாபம் வந்துள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் வியாக்கானம் தெரிவிக்கிறார்.  இப் படி மிச்சம் பிடிக்கிற மக்கள் பணத்தை ஊதாரித்தனமாக ரயில்வேத்துறை  நல்ல நிலையில் உள்ள கட்டங்களை இடித்து, புதிய கட்டுமானங்களுக்கு திட்டமிடுகிற செயல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதன்தொடர்ச்சியாகவே, வட கோவை ரயில் நிலையத்தில் உள்ள தரைத்தளங்கள் தற்போது இடிக்கப் பட்டு வருகிறது. கடந்த ஆறு மாதங் களுக்கு முன்புதான் வடகோவை ரயில் நிலையில் பலமான காங்ரீட்டு களை கொண்டு தரைத்தளம் அமைக் கப்பட்டது. மேலும், இங்குள்ள பெரும்பாலன கட்டடங்கள் நல்ல  நிலையில் உள்ளது. இந்நிலையில், ஆறு மாதங்களுக்கு முன்பு பல  லட்சக்கணக்கான ரூபாய் செலவு  செய்து அமைக்கப்பட்ட தரைத் தளம் தற்போது முழுவதுமாக பெயர்த்தெடுத்து இடிக்கும் பணி களை ரயில்வே பொறியியல் துறை  மேற்கொண்டு வருகிறது. ரயில்  நிலையத்திற்கு, ரயில் பயணிக ளுக்கு தேவையான அத்தியாவசிய மான பணிகளை செய்ய மறுத்து விட்டு, நல்ல நிலையில் இருப்பவை களை இடிப்பது என ஊதாரித்தன மான செலவுகளை செய்வதை ஒரு போதும் ஏற்க முடியாது.  தென்னக ரயில்வே நிர்வாகம் உடனடியாக தலையிட வேண்டும். மேலும் மக்கள் பணத்தை வீணடிக் கிற ரயில்வே பொறியியல் துறை  அதிகாரிகள் மீது உரிய விசாரணை  நடத்தி நடவடிக்கை எடுக்க வேண் டும் என தெரிவித்துள்ளார்.