நாமக்கல், மே 11- விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஒப்பந் தப்படி கூலி உயர்வு வழங்கிட வேண்டும் என விசைத்தறி தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத் தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்த றிகள் இயங்கி வருகிறது. விசைத்தறி தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமு கமாகவும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை விசைத் தறி தொழிலில் பணிபுரியும் ஆண் பெண் தொழிலாளர்களுக்கு, கூலி உயர்வு ஒப்பந் தம் ஏற்படுத்தப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் கடந்த 21.5.2023 விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் 10 சதவீகிதம் கூலி உயர்வு வழங்குவது எனவும், அதில் அடுத்து வரும் முதல் ஆண்டு ஏழு சதவீத கூலி உயர்வும், இரண்டாம் ஆண்டு மூன்று சதவீ தம் கூலி உயர்வு என பத்து சதம் கூலி உயர்வு இரண்டு ஆண்டுகளுக்கு வழங்குவதென ஒப்பந்தம் அமுல் ஆனது. தற்போது, 1.6.2023 முதல் 31.5.2024 வரை ஏழு சதவீதம் ஒப்பந்தம் முடிவு பெற உள்ள நிலையில், 1.6.2024 முதல் 31.5.2025 வரை மூன்று சத கூலி உயர்வை, ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்க வேண்டும் என விசைத்தறி தொழி லாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ். தொழிற்சங்க அலுவலகத்தில், நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத் தின் சிறப்பு ஒன்றியக் குழு பேரவை கூட்டம் சங்க நிர்வாகி அசன் தலைமையில் நடை பெற்றது. இதில், விசைத்தறி சம்மேள மாநில உதவிச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியன், விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.அசோகன் உள்ளிட்டோர் பங் கேற்று கருத்துரையாற்றினர். இதில், கூலி உயர்வு வழங்கக்கோரி, விசைத்தறி உரிமையாளர் சங்கத்திற்கு கடி தம் அனுப்புவது, அதனைத் தொடர்ந்து கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த கோரி, பள்ளிபாளையம் வட்டார பகுதி முழுவதும் ஆட்டோ பிரச்சாரம், துண்டு பிரசுரம் வழங்கு தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. முடிவில் சங்க ஒன்றியக் குழு செயலாளர் எஸ்.முத்துக்குமார் நன்றி கூறினார். இதில் ஏராளமான விசைத்தறி தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.