districts

img

பவர்கிரீட் நிறுவனம் மறு மதிப்பீடு செய்து இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

தருமபுரி, ஏப்.6- பவர்கிரீட் நிறுவனம் மறு மதிப்பீடு செய்து இழப்பீடு வழங்கக்கோரி விவ சாயிகள் தருமபுரி மாவட்ட ஆட்சி யர் ச.திவ்யதர்சினியிடம்  மனு அளித்த னர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம்  வட்டம், நாகரசம்பட்டி கிராமத்தைச்  சேர்ந்த 10க்கும் மேற்பட்ட விவசாயி கள் 2019 ஆம் ஆண்டு பவர்கிரீட் நிறு வனம் உயர் மின்னழுத்தம் கொண்ட மின்சாரத்தை கொண்டு செல்ல மின்  கோபுரம் அமைக்க நிலம் அளித்தனர். ஆனால், இவர்களுக்கு பவர்கிரீட் நிறு வனம் உரிய இழப்பீடு வழங்க வில்லை. இதையடுத்து விவசாயிக ளின் தொடர் முறையீடு காரணமாக, வட்டாட்சியர்  முன்னிலையில் இரண்டு முறை சுமூக பேச்சுவார்த்தை மேற் கொள்ளப்பட்டது. அப்போது போதிய இழப்பீடு பெற்றுத் தருவதாக வட்டாட் சியர் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தார். ஆனால், தற்போது வரை இழப்பீடு வழங்கப்படவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கில் உயர்நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில் மாவட்ட ஆட்சியர்  நிலத்தைப் பார்த்து  மறு இழப்பீட்டு தொகையை தீர்மா னிக்க வேண்டும் என உத்தரவிட்டுள் ளது. ஆனால், இதுவரை மாவட்ட நிர் வாகம் மூலம் எந்தவித நடவடிக்கை யும் எடுக்கவில்லை. எனவே, விளை நிலத்தில் உள்ள வீடு, கிணறு, மரங் களை கணக்கிட்டு, பாதிக்கப்பட்ட விவ சாயிகள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு தொகையை பெற்றுத் தர  நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வலியுறுத்தி, பவர்கிரீட் நிறுவனத் திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினியி டம் மனு அளித்தனர்.