தருமபுரி, டிச.16- தருமபுரியில் கைத்தொழில் நெசவு செய்யும் வீடுக ளுக்கு நகராட்சி விதித்த தொழில் வரி விதிப்பை ரத்து செய்யக்கோரி விசைத்தறி தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் திங்களன்று மனு அளித்தனர். தருமபுரி மாவட்டத்தில் அன்னசாகரம், எட்டி மரத்துப் பட்டி, லளிகம், எறங்காட்டு கொட்டாய், உங்ரான அள்ளி, முக் கல்நாயக்கன்பட்டி, காந்திநகர், மாட்லாம்பட்டி, ஒட்டப்பட்டி, பாரதிபுரம், ஜருகு, உள்ளிட்ட 25க்கும் மேற்ற்பட்ட நகரம் மற்றும் கிராமங்களில் சுமார் 15 ஆயிரம் குடும்பங்கள் தலை முறை தலைமுறையாக நெசவுத் தொழில் செய்து வருகின்ற னர். இந்த சிறு விசைத்தறியாளர்களுக்கு ஆயிரம் யூனிட் மின்சாரம் தமிழக அரசு இலவசமாக வழங்கி வருகிறது. நக ராட்சிக்குட்பட்ட அன்னசாகரம் பகுதியில் மட்டும் நெசவு தொழிலாளர்கள் சுமார் 2000 பேருக்கு சுய வேலைவாய்ப் பும் கிடைக்கிறது. மேலும் நூல் விலை ஏற்றம் மின் கட்டணம் உயர்வு காரணமாகவும், வியாபாரம் மந்தம், பொருளாதார சூழ்நிலைகளாலும் நவீன உயர் ரக விசைத்தறி இயந்தி ரங்களாலும் இப்பகுதி மக்கள் இந்த தொழிலை நடத்த முடியா மல் பல்வேறு கூலி வேலைக்கும் தொழிலாளர்கள் செல்கின்ற னர். நெசவுத் தொழிலை தவிர வேறு தொழில் தெரியாத காரணத் தினால் குறைந்த வருமானத்திற்காக இந்த தொழிலை விடா மல் செய்து வரும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர், இந்நிலையில், தற்சமயம் நகராட்சிக்குட்பட்ட அன்னசாக ரம் பகுதியில் கைத்தொழில் செய்து வரும் விசைத்தறியா ளர்களுக்கு தருமபுரி நகராட்சி சார்பாக வீடுகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களுக்கு வணிக ரீதிலான நிலவரி அமல்படுத்தும் நோக்கில் வரியாக 1 அடிக்கு 12 ரூபாய் விதம் விதிக்கப்படும் என்று வரி விதித்து வருகின்றனர். சரத்து 265 படி சட்டமன்றத்தால் சட்டம் அமலுக்கு வந் தால் வரி விதிக்கும் அதிகாரம் ஏற்படும். ஆனால் நகராட்சி யினரே வரி விதிக்கும் அதிகாரத்தினை கையில் எடுப்பது, கைத்தொழில் செய்பவர்கள் மீது அதிக வரியாக வணிக ரீதி லான வரிவிதிப்பது சட்டப்படி செல்லத்தக்கதல்ல. மேலும் வரி விதிப்பது குறித்து அறிக்கையோ தகவலோ தராமல் தாங்களே இஷ்டம் போல் நடப்பது மக்களின் அடிப்படை உரி மைகளை மீறும் செயலாகும். அன்றாட வாழ்க்கையே நடத் துவதே விசைத்தறியாளர்களுக்கு சிரமமாக உள்ள நிலை யில், தங்கள் தொழில் மீது அதிகபட்ச வரி விதிப்பது ஏற் கத்தக்கதல்ல. எனவே, தற்போது விதித்த வரிவிதிப்பை நிறுத்தி யும் தவறுதலாக விதிக்கப்பட்ட வரிகளை ரத்து செய்ய உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என அன்னசாக ரம் பகுதியை சேர்ந்த விசைத்தறியாளர்கள் 200 க்கும் மேற் பட்டவர்கள் மனு அளித்தனர்.