districts

img

ஏழைகளை இருட்டில் தள்ளும் செயலே மின் கட்டண உயர்வு

ஜானகி

நான் ஆப்செட் பிரிண்டிங்கில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். எல்லாத்துக்கும் வரிபோட்டதால் குடும்பம் நடத்த சிரமப்பட்டு வரு கிறோம். கேஸ் சிலிண்டர் விலை  உயர்த்தியதாலா கரண்ட் அடுப்பு உப யோகப்படுத்தலாம்னு நினைக்கு றத்துக்குள்ள இப்படி கரண்ட் விலை யையும் உயர்த்திட்டாங்க. அரிசி, கோதுமைக்கெல்லா ஜிஎஸ்டி வரி  போடுறாங்க. அதனையே எங்களால் சமாளிக்க முடியல. இப்ப கரண்ட் விலையையும் ஏத்திட்டா நாங்க என்ன பன்னுறது.

அபுதாகீர்

எங்களின் வாழ்வாதாரமே ரொம்ப கஷ்டத்தில இருக்குது. இதற்கி டையே கரண்ட் பில் விலையை ஏத்தின அடிப்படையான மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். அன்றாடம் பிழைக் கிறவருக்கு அங்களது வாழ்க்கையில் பெரும் கஷ்டத்தை கொடுக்கும்.

பாபா

மத்திய அரசும், மாநில அரசும் தொடர்ந்து இதுபோன்று செய்தால் மக்களுக்கு அன்றாடம் பயன்படுத்து வதற்கெல்லாம் வரி போட்ட ஸ்ரீலங்கா மாதிரி இங்கேயும் கண்டிப்பா நடக் கும். கடைசி நாள் கரண்ட் பில் கட்ட  முடியவில்லை என்றால், பைன் போடு வார்கள். இதவே கட்ட முடியாத நிலை யில் இருக்கிறோம். இப்போது இந்த ஆறு, ஏழு வருசமாகத்தான் இவ்வளவு கஷ்டம். யாரிடமும் காசு  இல்லை. அம்பானி, அதானி ஆட்க ளுக்குத்தான் இப்போ அரசாங்கமே நடக்குது. இதெல்லாம் மோடியின் வேலை.

ஜெயலட்சுமி

எங்க குடும்பத்துல நாலு பேர் சம் பாதித்தாலும் பத்தமாட்டிங்கிது. காட் டுக்குள்ள போய்தான் குடியிருக்க  வேண்டும்; டவுன் என்னத்துக்கு! நாங் களோ வாடகைக்கு குடியிருக்கோம். வீட்டுக்காரங்க கரண்ட் பில் என்ன  கேட்கிறாங்களோ அதை கொடுக்க வேண்டியிருக்கிறது. கோல்டு வின்னர் எண்ணை 200 ரூபா. இலவசமே வேண்டாம் சாமி. விலை ஏத்தாம இருந்தா மட்டும் போதும். நம்ம கிட்ட புடுங்கி நம்மகிட்டேயே கொடுக் குகிறாங்க. இவங்கதான் பொழைக்கி றாங்க. ஆட்சியில் உள்ளவர்கள் கருனை காட்டனும்.

அபிதா

நான் தனியார் கல்லூரியில் படிக்கி றேன். தனியார் விடுதியில் தங்கித் தான் படிக்கிறேன். என் அறையில்  தனி மீட்டர் உள்ளது. எவ்வளவு கட்ட ணம் வருகிறதோ அதனை என்னுடன் அறையில் தங்கியிருக்கும் மாணவி களோடு பங்கிட்டு கட்டுவோம். மின்  கட்டணம் உயரும்போது எங்களுக்கு  விடுதி கட்டணம், சிலிண்டர் கட்ட ணமும் ஏறியுள்ளது. இந்நிலையில், மின் கட்டண உயருகிறபோது வீட் டில் உள்ளவர்களிடம் கூடுதலாக பணம் கேட்கவேண்டிய நிலை உள் ளது. அவர்கள் அங்கு என்ன சூழலில் உள்ளார்கள் என்பதை இங்கிருந்து உணர முடியாது. ஆனால், நான் கேட் பதால் அவர்கள் எப்படியாவது பணத்தை புரட்டி கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. ஆகவே மின் கட்டண உயர்வை அரசு கைவிட வேண்டும்.

கயல்விழி

நான் வாடகை வீட்டில்தான் இருக் கிறேன். முதல் இருந்த நிலையில், இருந்தவதைவிட இப்போது அதிக மாக மின் கட்டணம் உயரும். எங் களைப்போன்று மாத சம்பளம் வாங்கு கிற குடும்பத்தினருக்கு இது தாங்க முடியாத சுமை ஏற்படுத்தும்.

சண்முகம், விசைத்தறியாளர்

இந்த மின் கட்டண உயர்வு அனை வரையும் பாதிக்கும். விசைத்தறிகள் நூல் விலையால் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வரும் நிலை யில், மின் கட்டண உயர்வு என்பது விசைத்தறி உரிமையாளர்களையும், தொழிலாளர்களையும் கடும் நெருக் கடிக்கும், பாதிப்பிற்கும் உள்ளாக் கும்.

தனசேகரன், தையல் கடைக்காரர்

மின் கட்டணம் என்பது அதிகமா கவே உள்ளது. முன்பு கடைகளுக்கு ரூ.1000 வரை மின் கட்டணம் வந்தது. இப்போது ரூ.2500 வரை மின் கட்ட ணம் செலுத்தி வருகிறோம். இனி கடை வாடகைக்கு இணையான மின் கட்டணம் வரும் என்ற நிலை ஏற்பட் டுள்ளது. வீடுகள் மற்ற தொழில் களைப் போல ஏதாவது மானியம் கொடுத்தால் பரவாயில்லை.

ராஜா, சிறு கார்மென்ட்ஸ் உரிமையாளர் 

நான் கடந்த 25 வருஷமா சிறு தொழிலாக கார்மென்ட்ஸ் நடத்தி வருகிறேன். 10 பெண்கள் ‌வேலை செய்யுராங்க. ஏற்கனவே நூல் விலை உயர்வினால் கடுமையாக பாதிக்கப் பட்டு வருகிறோம். தொடர்ந்து விலை வாசி உயர்வு மேலும் பாதிக்கப்பட் டுள்ளோம். கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இப்போதுதான் மூச்சு விடுகிறோம். அதற்குள் மின் கட்டண உயர்வு என்றால், தொழில் நடத்துவது எப்படி? ஏழை, நடுத்தர மக்கள் வாழ்வது எப்படி? மின் கட்டனத்தை குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, உயர்த்தாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெந்த புண்ணில் வேலை பாய்சுவதா!

இந்த கட்டண உயர்வு என்பது, கொரோனா தொற்று காலத்தில் ஏற் பட்ட பொருளாதார நெருக்கடியி லிருந்து தற்போது மீண்டு வரும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பொருளாதார சிக்கலை ஏற்படுத்தும். தமிழகத்தில் 100 யூனிட் மின்சாரம் வரை இலவசமாக வழங்கப்பட்டு வந் தது. தற்போது மின் கட்டணம் உயர் வுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணை யத்திடம் தமிழ்நாடு மின்வாரியம் அளித்துள்ள பரிந்துரைகளின் படி மின்கட்டணம் உயர்ந்தால் ஏழை மக் கள் பெரிதும் பாதிப்படைவார்கள். 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்து வோருக்கு ஒரு மாதத்திற்கு ரூ.27.50 கூடுதல் கட்டணம் செலுத்த பரிந்து ரைக்கப்பட்டுள்ளது. இதனால், 55  ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டி யிருக்கும்.

இதேபோல் 500 யூனிட்டுகள் வரை  பயன்படுத்தினால் மாதத்திற்கு 297.50 ரூபாயும், இரண்டு மாதத்திற்கு 595 கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டும். இது தற்போதைய அசா தாரண சூழ்நிலையில் மின்சாரம் கட்டணம் செலுத்த முடியாத நிலை  ஏற்படும். மக்களை இருளில் தள்ளும் தமிழ்நாடு மின்சார வாரியம் அளித்த பரிந்துரையில், மின் கட்டண உயர்வு என்பது தற்போதைய சூழலில் மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. ஏற்கனவே, தற்போது ஒன் றிய அரசு ஜிஎஸ்டி என்ற பெயரில் அனைத்து அத்தியாவசிய பொருட்க ளுக்கும் விலையை ஏற்றி உள்ளது. இதையே சமாளிக்க முடியாத சூழ லில் தமிழக அரசு மின்சார வாரியம் மின்கட்டண உயர்வை உயர்த்த முடிவு எடுத்திருப்பது என்பது, வெந்த புண்ணில் வேலை பாய்சுவது போல உள்ளது.

தமிழ்நாடு மின்சார ஆணையத் தின் மின்சார கட்டண உயர்வு என்பது ஏழை நடுத்தர மக்களை பொருளா தார ரீதியாக பின்னோக்கி தள்ளும் அவல நிலையைதான் ஏற்படுத்தப் போகிறது. இது ஒளியில் இருக்கும் மக்கள் இருளில் மூழ்கடிக்கும் வேலையை தான் மின்சார ஒழுங்கு முறை ஆணையம் செய்துள்ளது. விடி யல் ஆட்சி தருவதாய் ஸ்டாலின் சொன்னார் மின் கட்டணத்தை உயர்த்தி. இருட்டறையில் தள்ளு வோம் என செந்தில்பாலாஜி சொல் கிறார். ஆகவே மின் கட்டண உயர்வு பரிந்துரையை அரசு மறுபரிசீலனை செய்து தற்போது நடைமுறையில் உள்ள மின் கட்டணத்தையே வசூ லிக்க வேண்டும்  என சேலம் மாவட்ட மக்கள் வலியுறுத்துகின்றனர்.