districts

img

75 சதவிகிதம் கூலி உயர்வு வழங்கிடுக

நாமக்கல், ஜன.3- விசைத்தறி தொழிலாளர்களுக்கு 75  சதவிகிதம் கூலி உயர்வு வழங்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழி லாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலா ளர் சங்கத்தின் 21 ஆவது மகாசபை கூட்டம், திருச்செங்கோடு ஆஞ்சநேயர் கோவில் வீதி பகுதியில் அமைந்துள்ள தோழர் காவேரி நினைவகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கே.மோகன் தலைமை  வகித்தார். சிஐடியு மாவட்ட உதவித்தலை வர் எம்.செங்கோடன் சங்கத்தின் கொடி யினை ஏற்றி வைத்தார். மாவட்ட துணைத் தலைவர் ஆர்.செந்தில்குமார் வரவேற்புரை யாற்றினார். மாவட்ட பொருளாளர் முத்துக் குமார் அறிக்கையை முன்வைத்து பேசி னர்.  இக்கூட்டத்தில் விசைத்தறி தொழிலா ளர்களுக்கு 75 சதவிகிதம் கூலி உயர்வு வழங்க வேண்டும். 8 மணி நேர வேலை, இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட சட்ட சலுகைகளை அமலாக்க வேண்டும். சொந்தவீடு இல்லாத விசைத்தறி தொழிலாளர்களுக்கு வீட்டு மனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதையடுத்து நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவராக கே.மோகன், மாவட்ட செய லாளராக எம்.அசோகன், மாவட்ட பொருளா ளராக எஸ்.முத்துக்குமார் உள்ளிட்ட 21 பேர் கொண்ட புதிய மாவட்டக்குழு தேர்வு  செய்யப்பட்டது. சிஐடியு மாவட்ட செயலா ளர் என்.வேலுசாமி நிறைவுரையாற்றினார். இதில், 100க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.