டாக்டர் கிருஷ்ணசாமிக்கு கண்டனம்
கோவை, ஆக.17- அரசியல் ஆதரவற்று தொடர் தோல்வியின் விரக்தியில், அரசியலில் தனது இருத்தலை தக்கவைத்துக்கொள்வதற் காக ஊடகவியலாளர் மீது பாயும் புதிய தமிழகம் கட்சி தலை வர் கிருஷ்ணசாமிக்கு கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன் றம் (சிபிசி) கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிபிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் சனியன்று புதிய தமிழகம் கட்சியின் தலை வர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் இட ஒதுக்கீடு தொடர்பான கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பியுள்ளனர். அப்போது மூத்த செய்தி யாளர் குருசாமி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடி யாமல் திணறிய கிருஷ்ணசாமி, நிதானம் இழந்து, அச்சில் ஏற்ற முடியாத வார்த்தையை நேரலையிலேயே பேசி இருக்கி றார். தன்னை அரசியல் அரங்கில் முக்கியத் தலைவராக கருதிக் கொள்ளும் கிருஷ்ணசாமி, அச்சிலேற்ற முடியாத வார்த்தையைப் பேசி இருப்பது அவரது முதிர்ச்சியற்ற தன்மையைக் காட்டுகிறது. தன் அரசியல் சுயலாபங்களுக் காக சக அரசியல் தலைவர்களிடம் தனது கொள்கைகளை யும், சுயமரியாதையையும் அடகு வைப்பதை அவர் பெரு மிதமாக நினைக்கலாம். ஆனால், பத்திரிகையாளர்கள் பொதுவெளியில் கண்ணியத்தையும் தங்களது சுயமரியாதை யையும் விட்டுக் கொடுக்க ஒருபோதும் தயாராக இல்லை. அச்சிலேற்ற முடியாத வார்த்தையை செய்தியாளர் சந் திப்பில் பேசிய கிருஷ்ணசாமி அதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைத்தறித்துறை இயக்குநர் ஆய்வு
நாமக்கல், ஆக.17- நாமக்கலில் கைத்தறித்துறை இயக்குநர் வெள்ளியன்று ஆய்வுப்பணியில் ஈடுபட்டார். நாமக்கல் மாவட்டத்தில் அரசு நூல் கிடங்கில் கைத்தறித் துறை இயக்குநர் சண்முகசுந்தரம் சனியன்று ஆய்வு செய் தார். அப்போது, வெப்படை அருகே பாதரையில் செயல்பட்டு வரும் கைத்தறித்துறை அரசு நூல் கிடங்கினை, ஆட்சியர் உமா முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பராமரிக்கப் பட்டு இருப்பு பதிவேடு, நூல் வரப்பெற்ற பதிவேடு மற்றும் ஆய்வக பதிவேடு உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் செப்.15 வரை மின் உற்பத்தி நிறுத்தம்
சேலம், ஆக.17- மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டாவது பிரிவில் வருடாந்திர பராமரிப்புப் பணிக்காக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்படுகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகள் மூலம் 840 மெகா வாட்டும், இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகு மூலம் 600 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும். இரண்டு பிரிவுகளிலும் 1,440 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது மேட்டூர் அனல் மின் நிலையத்தின் இரண்டாவது பிரிவில் வருடாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இப்பராமரிப்புப் பணி செப்.15 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதகையில் இருந்து குன்னூருக்கு சிறப்பு ரயில்!
உதகை, ஆக.17- வார விடுமறையில் உதகையில் இருந்து குன்னூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது. சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி விடுமுறையை கொண்டாடுவதற்காக உதகை வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக வார இறுதி நாட்களில் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி குன்னூர் - உதகை இடையே சிறப்பு மலை ரயில் சனி (ஆக.17), ஞாயிறு (ஆக.18) மற்றும் 25 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 3 நாட்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் குன் னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு 9.40 மணிக்கு உதகை செல் லும். இதேபோல உதகையில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்படும் ரயில் 5.55 மணிக்கு குன்னூர் வரும். இந்த ரயில்களில் முதல் வகுப்பில் 80 இருக் கைகள் மற்றும் 2 ஆவது வகுப்பில் 130 இருக்கைகளுடன் இயக்கப்படும். மேலும், உதகை - கேத்தி இடையே இரு மார்க்கங்களிலும் 3 சுற்றுகள் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மேற்கண்ட சிறப்பு மலை ரயில்களில் சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்து பயணிக் கலாம் என கூறப்பட்டுள்ளது.
ஒகேனக்கலில் பரிசல் இயக்க மீண்டும் தடை
தருமபுரி, ஆக.17- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து விநாடிக்கு 28 ஆயிரம் கனஅடி யாக அதிகரித்துள்ளதால், பரிசல் இயக்க மீண்டும் தடை விதித்து ஆட்சி யர் கி.சாந்தி உத்தரவிட்டுள்ளார். கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங் களின் காவிரி நீர் பகுதிகளில் தென் மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபிணி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணை களில் இருந்து காவிரி ஆற்றில் விநா டிக்கு சுமாா் 19 ஆயிரம் கனஅடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு மேலாக தமிழக காவிரிக் கரையோர நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள் ளது. அதன்படி, வெள்ளியன்று மாலை நிலவரப்படி விநாடிக்கு 13 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து சனியன்று காலை திடீரென அதிகரித்து விநாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு வந்து கொண்டிருக்கிறது. கடந்த இரு தினங் களாக காவிரி ஆற்றின் நீர்வரத்து குறைந்து வந்ததால் சின்னாறு பரிசல் துறையில் இருந்து பிரதான அருவி வழியாக மணல்மேடு பகுதி வரை மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்க அனு மதி அளித்திருந்தது. இந்நிலையில், சனியன்று நீர் வரத்து அதிகரித்ததால், தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஒகே னக்கல் காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு தடை விதித்துள்ளார். மேலும் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கு தொடர்ந்து 34 ஆவது நாட்களாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு மற்றும் தமிழக காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை உள்ளிட்ட காரணங்களால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பது, குறை வதுமாக உள்ளதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தின் அளவுகளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் அரசியல் செய்யும் அண்ணாமலை
சேலம், ஆக.17- அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில், அரசியல் ஆதாயம் தேடுவதையே தனது தனி திறமையாக அண்ணாமலை கொண்டுள்ளார், என கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ் வரன் எம்எல்ஏ விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சேலத்தில் சனியன்று செய்தி யாளர்களிடம் பேசுகையில், அத்திக்கடவு - அவிநாசி திட்டத் திற்காக போராடிய பலர் தற்போது உயிரோடு இல்லை என்றா லும், அவர்கள் போட்ட விதை தற்போது பலருக்கும் பயன ளித்துள்ளது. மேலும், தேவையான நிலத்தை கையகப் படுத்தாமல் பணிகள் நடைபெற்றதால் இத்திட்டம் முழுமை பெறுமா என்கிற ஐயம் இருந்த நிலையில், முதல்வரின் அழுத்தத்தால் அமைச்சர் உள்பட அதிகாரிகள் அனைவரும் தீவிரமாக பணியாற்றி பணிகளை நிறைவு செய்துள்ளனர். இத்திட்டத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இத்திட்டத்திற்காக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரு துரும்பை கூட எடுத்துப் போடவில்லை. கொங்கு நாட்டில் பிறந்ததாக சொல்லிக்கொள்ளும் அண்ணாமலை, இதுவரை கொங்கு நாட்டிற்கு ஒரு நல்லதாவது செய்துள்ளாரா? கொங்கு நாட் டின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை ஒன்றிய அரசிடம் பேசி பெற்று தராமல், செய்தியாளர் சந்திப்பில் மட்டுமே அண்ணாமலை பேசி வருகிறார். அரசியல் ஆதாயம் தேடுவ தையே தனது தனித்திறமையாக அண்ணாமலை கொண்டுள் ளார். அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை போல சேலம், நாமக்கல், திருச்சி மக்கள் பயன்பெறும் வகையில், திருமணி முத்தாறு திட்டத்தை அரசு கொண்டுவர வேண்டும். இதுவும் 50 ஆண்டுகால கனவுதான், என்றார்.
தேசிய அளவிலான சிலம்பம் போட்டி சேலம் மாணவர்கள் ‘சாம்பியன்’
சேலம், ஆக.17- தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று சேலம் மாணவ, மாணவிகள் சாதனை படைத்தனர். சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த பேளூர் துளி அறக்கட்டளை, சித்தன் சிலம்பம் குழுவில் பயிற்சி பெற்று வரும் பேளூர், அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 25 மாணவர்கள், அண்மையில் வேளாங்கண்ணியில் நடை பெற்ற தேசிய அளவிலான சிலம்பம் தற்காப்புக் கலை போட்டி யில் பங்கேற்றனர். இந்த மாணவர்கள் வெவ்வேறு நிலை களில் முதல் மூன்று இடங்களைப் பிடித்ததோடு, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்தனர். இந் நிலையில், இந்த மாணவர்களுக்கு, துளி அறக்கட்டளை சார்பில் பேளூரில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட உதவி காவல் ஆய்வாளர் சித்ரா, வருவாய் ஆய்வா ளர் யசோதா, சேலம் சிலம்பம் பயிற்றுநர் சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் மாணவ, மாணவிகளுக்கு பரிசுக் கோப்பை, சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
தருமபுரி, ஆக.17- ஏரியூர் அருகே உள்ள சிகலரஅள்ளி பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அப்ப குதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள அஜ்ஜன அள்ளி ஊராட்சிக்குட்பட்ட சிகலரஅள்ளி பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்க ளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, 4 சிறிய அளவிலான நீர்மின் தேக்கத் தொட்டிகள் அமைக்கப் பட்டது. இந்நிலையில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் நியமனம் செய்யப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆப்ரேட்டர் கடந்த இரு தினங்களுக்கு முன் ஓய்வு பெற்றார். புதிதாக பணியாளரை ஊராட்சி மன்ற நிர்வாகம் நியமிக்காமல், தற் காலிகமாக ஒருவரை நியமித்து குடிநீர் விநியோகம் செய்ய ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் மின்தடை மற்றும் கிராம சபைக் கூட்டம் உள்ளிட்ட காரணங்களால் தற்காலிகப் பணியாளர் சிகலர அள்ளி பகுதிக்கான குடிநீர் விநியோ கிக்கும் பணியை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதா கத் தெரிகிறது. இந்நிலையில், சிகர அள்ளி பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் முறையாக குடிநீர் விநியோகிக்காததைக் கண்டித் தும், நிரந்தரமாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆப்ரேட் டரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி வெள்ளியன்று, அப்பகுதி பொதுமக்கள் சிகலர அள்ளி - ஏரியூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவ லர் சம்பவ இடத்திற்கு வந்து, புதிதாக நிரந்தர குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர் நியமிக்கப்படு வதாகவும், குடியிருப்புகளுக்கு முறையாக குடிநீர் விநி யோகிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். அத னையேற்று மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அனைவ ரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ஓட்டுநரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி
உதகை, ஆக. 17- கோத்தகிரியில் அரசுப் பேருந்தின் மீது உயர் மின்ன ழுத்த கம்பி உரசியதால் உயிரிழந்த ஓட்டுநரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள் ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், நீலகிரி மாவட்டம், கோத்தகிரிவட்டம், கெங்கரை-1 கிராமத்தில் வெள்ளியன்று காலை கூட்டாடாவிலிருந்து கோத்தகிரி நோக்கி நான்கு பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து கோவில்மட்டம் என்னும் இடத்தில் வந்துகொண்டி ருந்தபோது உயர் மின்அழுத்தக்கம்பி பேருந்தின் மீது உரசிய விபத்தில் நான்கு பயணிகள் மற்றும் நடத்துநர் பேருந்துப் படிக் கெட்டின் வழியாக கீழே இறங்கி தப்பித்த நிலையில், எதிர் பாராத விதமாக மின்சாரம் தாக்கி அரசுப்பேருந்து ஓட்டுநர் பிர தாப் (42) உயிரிழந்தார். இவ்விபத்தில், உயிரிழந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் பிரதாப்பின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சத்தை முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
நோயாளிகளின் உடன் இருப்போர் தங்கும் விடுதி
மேட்டுப்பாளையம், ஆக. 17- மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.40 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட நோயாளி களின் உடன் இருப்போர் தங்கும் விடுதியை மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சனியன்று திறந்து வைத் தார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு மருத்து வமனையில் நாள்தோறும் சுமார் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற வந்து செல்கின்றனர். மேலும், பிரசவம், விபத்து உள்ளிட்ட பிரிவுகளில் சுமார் 150 முதல் 200 பேர் வரை தங்கி சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெறுவோருடன் உடனிருந்து உதவிடும் உறவினர்கள் மருத்துவமனையில் தங்க போதிய வசதி இல்லாமல் இருந்தது. இதனையடுத்து, மேட்டுப்பாளையம் நகராட்சி தேசிய நகர்ப்புற வாழ்வாதார குழுமம் அரசு மருத்துவமனை வளாகத்தில் அக மற்றும் புற நோயாளிக ளின் உடன் இருப்போர் தங்கும் விடுதி ரூ.40 லட்சம் மதிப்பீட் டில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த தங்கும் விடுதியில் 20 ஆண் கள் மற்றும் 20 பெண்கள் தங்கும் வகையில் அறை கட்டப்பட் டுள்ளது. புதிதாக கட்டி முடிக்கப்பட்ட இந்த தங்கும் விடுதியினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி சனியன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை இணை இயக்குநர் ராஜ சேகர், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் வாசுதேவன், நக ராட்சி ஆணையர் அமுதா, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கார்த்திக் மஹராஜா மற்றும் மருத்துவர்கள், மேட்டுப்பாளையம் நகர மன்றத் தலைவர் மெஹரீபா பர்வீன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
காட்டெருமையை மரக்கிளையில் தொங்கவிட்ட சிறுத்தை
உதகை, ஆக.17- குட்டி காட்டெருமையை சிறுத்தை வேட்டையாடி தூக்கி சென்று மரக்கிளையில் தொங்கவிட்டு சென்றதை கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வனவிலங்குகள் அதிக அளவில் நுழை கின்றன. இதனால், மனித- வனவிலங்கு மோதல் ஏற்பட்டு வரு கிறது. குறிப்பாக, வனப்பகுதியை ஒட்டி உள்ள தேயிலை தோட் டங்களில் வனவிலங்குகள் அதிகமாக வருவதால் அங்கு விவ சாயப் பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ள நிலையில், உதகை அடுத்த மஞ்சூர் அருகே உள்ள குந்தா தூனேரி பகுதியில் தேயிலை தோட்டத்தில் கடந்த சில நாட்களாக காட்டெருமைகள் கூட்டமாக மேய்ச்சலில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சனியன்று மாலை காட்டெருமைகள் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த சமயத்தில், காட்டெருமை கூட் டத்தை சிறுத்தை கண்டு நீண்ட நேரமாக நோட்டமித்துக் கொண்டிருந்தது. சரியான சமயம் கிடைத்த போது காட் டெருமை கூட்டத்தில் இருந்து ஒரு குட்டி காட்டெருமையை சிறுத்தை வேட்டையாடியது. இதை தூரத்தில் இருந்து பார்த்த தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், அங்கிருந்து ஒரு சிலர் சத்தம் போட்டனர். மேலும், காட்டெருமை குட்டியை லாவகமாக தூக்கி கொண்டு, 25 அடி உயரத்தில் உள்ள நாவல் மரத்தின் கிளை யில் சிறுத்தை தொங்கவிட்டு சென்றது. தொழிலாளர்கள் தொடர்ந்து சத்தம் போட்டதால் அந்த சிறுத்தை, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. வேட்டையாடப் பட்ட குட்டி காட்டெருமையின் உடல் நாவல் மரத்தில் இருப்ப தால் மீண்டும் அப்பகுதிக்கு சிறுத்தை வரும் என்பதால் பொது மக்கள் பீதியில் உள்ளனர்.
அங்கன்வாடி மைய கட்டிடங்கள் திறப்பு
கோபி, ஆக. 17- கோபி அருகே புதிய இரண்டு அங்கன்வாடி மைய கட்டிடங்களை திறந்து வைத்து புதிய தார் சாலை அமைக் கும் பணிகளை அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட பொலவக்காளிபாளையம், சந்திராபுரம், மேவாணி, அம்மாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.62 இலட்சம் மதிப்பீட் டில் புதிய தார்சாலைகள் அமைக்கும் பணி மற்றும் அம்மா பாளையம், பொலவக்காளிபாளையம் பகுதியில் ரூ.27 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடங் கள் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் அந்தி யூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு புதிய தார்சாலை அமைக்கும் பணி மற்றும் அங்கன் வாடி மைய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத் தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர் ரவீந்திரன், அம்மா பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் சரஸ்வதிராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்திவேல், பிரேம்குமார், பொறியாளர் முருகேசன், மாவட்ட கவுன்சிலர் சிவகாமி தங்க வேல், மகளிர் அணி துணை அமைப்பாளர் ரேணுகாதேவி மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 25 பேருக்கு பணி ஆணை
திருப்பூர், ஆக.17- திருப்பூரில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 25 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட் டுள்ளன. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு தல் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள் ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 16 நிறுவனங்களும், 78 வேலைநாடுநா்களும் பங்கேற்றனர். முகாமில், எழுதப் படிக் கத் தெரிந்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை 25 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
ஆக.21,22, ஆகிய தேதிகளில் காங்கேயத்தில் முகாம்
திருப்பூர் ஆக.17- திருப்பூர் மாவட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், காங்கேயம் வட்டத்தில் வரும் 21 ஆம் தேதி காலை 9 மணி முதல் 22 ஆம் தேதி காலை 9 மணி வரை முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் கூறிய தாவது, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப் பட்ட உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் படி வரும் 21 ஆம் தேதி காங்கயத்தில் முகாம் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங் களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து, அர சின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடை யின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். அதன்படி, வரும் 21 ஆம் தேதி காலை 9 மணி முதல் 22 ஆம் தேதி காலை 9 மணி வரை, மாவட்ட ஆட்சியர் உட்பட மாவட்ட அளவிலான அலுவலர்கள் கள ஆய்வுப் பணி மேற்கொள் வர். பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்தி தங்கள் குறைகளுக்கு தீர்வு காணலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.
கிராமசபையில் பொதுமக்களை அலட்சியப்படுத்திய அதிகாரிகள்
பொதுமக்கள் மறியல் திருப்பூர், ஆக.17- பல்லடம் தாலுகா மாணிக்கா புரத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி மக்களுக்கு பட்டா வழங் கப்பட்டது. ஆனால் இதுவரை நத்த புறம்போக்காக வகை மாற்றம் செய்யப்படாமல் உள்ளது. இது குறித்து கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை வைக்க சென்ற பொது மக்களை அலட்சியப்படுத்திய தால், சாலை அமர்ந்து போராட்டத் தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரம் பகு தியில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இன்னமும் மேய்ச்சல் நில மாகவே உள்ளது. இதனை நத்த புறம்போக்காக மாற்றிட வேண்டும். கருப்பண்ணசாமி நகர் பகுதியில் குடியிருந்து வரும் 37 குடும்பங்க ளுக்கு வீட்டுமனை பட்டா வழங் கிட வேண்டும். என வட்டாட்சியர், ஆட்சியர் உள்ளிட்டோர் இடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பல கட்ட போராட்டங்களும் நடத்தப்பட் டுள்ளது. ஆனால் இன்னமும் பட்டா வழங்காமல் கிடப்பில் போடப்பட் டுள்ளது. இதை கண்டித்து கிராம சபை கூட்டத்தை வட்டாட்சியர் வரும் வரை நிறுத்தி வைக்க வேண் டும் என மாணிக்காபுரம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் வியா ழனன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் மற்றும் பொது மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், ஒரு மணி நேரத்திற்கு மேலாக வட்டாட்சியர் வர வில்லை. மேலும், கிராம சபை கூட் டத்தில் கலந்து கொண்ட கிராம நிர்வாக அலுவலர் அங்கு காத்தி ருந்தவர்களை கண்டும் காணாமல் கிளம்ப முற்பட்டார். இதை கண்ட மக்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் தலை மையில் உடனடியாக சாலை மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வருவாய் அலுவலர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், அனைத்து கோரிக்கை களும் இரு தினங்களுக்குள் நிறை வேற்றித் தருகிறோம் என்று உத்தர வாதம் அளித்தார். இதுகுறித்து மாணிக்காபுரம் மக்கள் சிலர் கூறு கையில், பல்லடம் தாலுகா பகுதி மாணிக்காபுரத்தில், 20 ஆண்டு களுக்கு முன்னாள் அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப் பட்டது. ஆனால் நத்தம் புறம்போக் காக வகை மாற்றம் செய்ய வில்லை. இதனால், கல்வி கடன், வங்கி கடன் உள்ளிட்டவைகள் பெற முடியவில்லை. நிலம் அளவை தொடர்பாக அரசு அதிகாரிக ளுக்கு தகவல் அளித்தால் வருவ தில்லை. சாலை உள்ளிட்ட அடிப் படை வசதிகள் செய்வதில் கூட பிரச்சனை வருகிறது. இதனால் பல ஆண்டுகளாக சிரமத்திற்கு உள் ளாகி வருகிறோம். இந்நிலையில் கிராம சபையில் கோரிக்கை வைக்க வந்தால் அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் செல்கின்றனர் என்று வேதனையுடன் கூறினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் துரை சாமி, பிரவீன் குமார், வாலிபர் சங்க நிர்வாகிகள் தினகரன், சுதாகரன் முருகேஷ் உட்பட பலர் பங் கேற்றனர்.
பட்டியலின பெண் வாயில் மது ஊற்றி நிர்வாணப்படுத்தி சித்ரவதை
தருமபுரி, ஆக.17- தருமபுரி அருகே பட்டியலினப் பெண்ணை கடத்தி சென்று நிர்வாணப்படுத்தி மதுபா னம் ஊற்றி சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை, பட்டியலினத்தை சேர்ந்த சுரேந்தர் என்பவர் பள்ளிப் பருவத்தில் இருந்து காதலித்து வந்ததாக சொல்லப்படு கிறது. இந்நிலையில், ஆகஸ்ட் 14 அன்று சுரேந்தர் வீட்டை விட்டு சென்றவர் காலை முதல் வீட்டிற்க்கு வரவில்லை. அதே நேரத் தில் அப்பெண்ணும் காணவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் அப்பெண் ணின் தந்தை மற்றும் உறவினர்கள் என 20 பேர், சுரேந்தர் வீட்டுக்கு ஆகஸ்ட் -15 அன்று சென்று சுரேந்தரின் தந்தை செல்வம் மற்றும் அவரது தாய் இருவர் மீதும் தாக்குதல் நடத்தி, மிரட்டியுள்ளனர். அதை பார்த்த செல்வத்தின் அண்ணன் மகன் அர்ஜுன் சுப்பிரமணி, தடுத்த போது, அவரையும் அடித்துள்ளனர். பின்னர், சுரேந்திரன் தாயை இருசக்கர வாகனத்தில் கட்டாயப்படுத்தி ஏற்றிச்சென்றுள்ளனர். இதுகுறித்து சுரேந்திரனின் தந்தை மொரப் பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, மொரப்பூர் காவல்துறையி னர் 16 ஆம் தேதி கடத்தப்பட்ட பெண்ணை மீட்டு அரூர் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்ட பின்பு அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைத் தனர். மேலும், பெண்ணை கடத்திச் சென்ற பூபதி, செல்வி, பொன்ராசு, கலையரசன், வேலு, என ஐந்து பேர் உள்ளிட்ட 15 மீது எஸ்.சி / எஸ்.டி, பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து கடத்திச் செல்லப்பட்ட பெண் கூறுகையில், காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று என் மகன் எங்கே என்று கேட்டு பல்வேறு சித்திர வதைகளை செய்தனர். கட்டாயப்படுத்தி மதுபானத்தை வாயில் ஊற்றினர். பின்னர் மயங்கி இருந்த நான் விழித்துப் பார்க்கும் போது ஆடை இன்றி இருந்தேன். பின்னர், உன் மகன் இருக்கும் இடம் சொல்லவில்லை என்றால் குடும்பத்தோடு கொன்று விடு வோம் என மிரட்டிச்சென்றனர். அதன் பிறகு காவல்துறையினர் அந்த இடத்திற்கு வந்து எண்ணை மீட்டுச்சென்றனர், என்றார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாவட்டச் செயலாளர் ஏ.சேகர் கூறுகை யில், பட்டியலின பெண்ணை கடத்தி சென்று நிர்வாணப்படுத்தி வாயில் மது ஊத்தி பல் வேறு சித்திரவதைகளை சாதி ஆதிக்க கும் பல் செய்துள்ளனர். இந்த வழக்கில் உள்ள அனைவரையும் கைதுசெய்யவேண்டும்.சாதி ஆதிக்க சக்திகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண் டும். தொடர்ந்து அரூர் பகுதியில் பட்டியினத்த வருக்கு பல்வேறு வடிவங்களில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இதுபோன்ற சம்ப வங்களில் காவல்துறையினர் குற்றவாளிக ளிடம் மென்மையான போக்கை கடைபிடித்து வருகின்றனர்.இது போன்ற விசயங்களில் மெத்தனமாக செயல்படுகின்றனர்.எனவே பட்டியல் இன மக்கள் பாதிக்கப்படும் போது காவல்துறை விரைந்து செயல்பட்டு குற்ற வாளிக்கு தண்டனை பெற்றுதரும் மூலம் வன்கொடுமை தடுக்கமுடியும் என தெரி வித்தார்.