திருப்பூர், ஜன.29- ஒப்பந்தம் முடிந்து ஒரு மாதம் கடந்த நிலையில், இன்னும் கூலி உயர்வு வழங்காததை கண்டித்தும், நியாயமான கூலி வழங்க கோரி பிப்ரவரி 1ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக ஞாயிறன்று அனுப்பர்பாளையம் பாத்திர தொழிலாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற சம்பளப் பேச்சுவார்த்தை கூட்டுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 23 ஆம் தேதியன்று தொழிற்சங்கங்கள் மற்றும் பாத்திர உற்பத்தியாளர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதில் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என தொழிற் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.ஆனால் பாத்திர உற்பத்தியாளர் தரப்பில், ஓராண்டுக்கு பின் சம்பள உயர்வு வழங்க கால அவ காசம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். எனினும் பாத்திர தொழிலாளர் சங்கங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை. இந்நிலையில், ஜனவரி 28 ஆம் தேதிக்குள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர். ஆனால் பாத்திர உற்பத்தியா ளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் ஓராண்டு காலத்திற்கு சம்பள உயர்வு வழங்க முடியாது என ஜனவரி 27ஆம் தேதியன்று பத்திரிக்கை செய்தி வெளியிட் டுள்ளனர். இதைத்தொடர்ந்து சம்பள பேச்சுவார்த்தைக்கான கூட்டுக் குழு தலைவர் எல்பிஎப் வேலுச் சாமி தலைமையில் கூட்டம் நடை பெற்றது.
இக்கூட்டத்தில், ஒப்பந்தம் முடிந்து ஒரு மாதம் கடந்த நிலை யில், இன்னும் ஒரு வருட காலத் திற்கு கூலி உயர்வு வழங்க முடி யாது என்று பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது ஏற்புடைய தல்ல. உற்பத்தியாளர் சங்கத்தின் இந்த பிடிவாத போக்கை கண்டிப் பதுடன், இன்று (ஜனவரி 30) தொழி லாளர் துறை உதவி ஆணையரை சந்தித்து கடிதம் அளிக்கப்படும். மேலும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் நடை பெறும். அன்றைய தினம் வேலம் பாளையம் திலகர் நகர் முதல் அனுப்பர்பாளையம் பட்டறைதாரர் சங்க வரை பேரணியாக சென்று நியாயமான கூலி உயர்வை வழங்கமாறு ஆர்ப்பாட்டம் நடை பெறும் என சம்பளப் பேச்சு வார்த்தை கூட்டுக்குழு முடிவு செய் யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் கூட்டுக் குழு செயலாளர் கே.ரங்கராஜ், பொரு ளாளர் ஏடிபி தேவராஜ், துணைச் செயலாளர் ஏஐடியுசி செல்வ ராஜ், துணைத் தலைவர் ஈஸ்வரன், காமாட்சியம்மன் சங்கம் சார்பில் அர்ஜுனன் மற்றும் லட்சுமணசாமி, சிஐடியு சார்பில் கே.குப்புசாமி, சி. ஆறுமுகம் மற்றும் குபேந்திரன், எல்பிஎப் சார்பில் ரத்தினசாமி, ஏஐடியுசி சார்பில் நாகராஜ், எச்எம்எஸ் சார்பில் பாண்டியராஜ், ஐஎன்டியுசி சார்பில் அசோக் குமார், பிஎம்எஸ் சார்பில் ஸ்ரீனி வாசன் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் பங்கேற்றனர்.