கோவை, நவ.5- சாக்கடை கால்வாயை தூர்வா ரும் பணியை வேகப்படுத்த வேண் டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி சார்பில் அறிவிக்கப் பட்ட மறியல் போராட்டம் தற்காலிக மாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி, 64 ஆவது வார்டுக்குட்பட்ட கணேசபுரம் முதல் புலியகுளம் சங்கனூர் பள்ளம் வரை 10 ஆண்டுகளாக சாக்கடை கால் வாய் தூர்வாராப்படவில்லை. இத னால் மழைநீர் வீட்டுக்குள் செல்லும் நிலை இருந்து வந்தது.இதைய டுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனின் முயற்சியால், மாநகராட்சி மற்றும் மாவட்ட அதிகாரிகள், மசால் லே அவுட் பகுதியில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, சாக்கடை கால் வாயை தூர்வார மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், மாமன்ற கூட் டத்தில் 64 ஆவது வார்டு உறுப்பினர் ஜெய்பிரதாதேவி சீனிவாசன் கோரிக்கை வைத்து, ரூ.19 லட்சத் திற்கு கால்வாயை தூர்வார டெண்டர் விடப்பட்டது. இதைத்தொடர்ந்து வேலை துவங்கிய நிலையில், தற் போது பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனை கண் டித்தும், தூர்வாரும் பணியை வேகப் படுத்த வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் நவ.8 ஆம் தேதியன்று மறியல் போராட்டம் நடைபெறும் என அறி விக்கப்பட்டது. இந்நிலையில், ராமநாதபுரம் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுடன், காவல் ஆய்வாளர் செந்தில் உள் ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். இதில் கட்சியின் கோவை மாவட்டக்குழு உறுப்பினர் என். ஜாகிர், திமுக வட்டச் செயலாளர் சீனி வாசன், மாமன்ற உறுப்பினர் ஜெயப் பிரதாதேவி, சிபிஎம் நிர்வாகிகள் த. நாகராஜ், மகேந்திரன், கே.நாகராஜ், சிஐடியு ஆட்டோ சங்க மாவட்ட துணைத்தலைவர் டி.மாரிமுத்து ஆகி யோர் கலந்து கொண்டனர். அப் போது, கணேசபுரம் முதல் சங்க னூர் பள்ளம் வரை சாக்கடை கால் வாயை உடனடியாக தூர்வாருவது, செளரிபாளையம் மெயின் ரோட்டில் உடனடியாக தார்ச்சாலை அமைத்து தருவது என பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. இதைய டுத்து சிபிஎம் சார்பில் அறிவிக்கப் பட்ட மறியல் போராட்டம் தற்காலிக மாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.