நாமக்கல், அக்.9- தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசு தசரா பண்டிகைக்கு முன்பாக அஞ்சல் ஊழி யர்களுக்கு போனஸ் வழங்குவது வழக்கம். ஆனால், நடப் பாண்டு அஞ்சல் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய போனசை தற்போது வரை கொடுக்காமல் ஒன்றிய அரசு இழுத்தடித்து வருகிறது. இதனை கண்டித்தும், உடனடியாக போனசை வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருச்செங் கோடு தலைமை தபால் நிலையம் முன்பு அஞ்சல் ஊழியர்கள் சங்கங்களின் சார்பில் சனியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.