districts

img

பொங்கல் பண்டிகை ரேக்ளா போட்டி குதிரைகளுக்கு நீச்சல், நடைபயிற்சி

சேலம், ஜன.12- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற உள்ள ரேக்ளா போட்டியில் பங்கேற்க உள்ள குதிரைகளுக்கு, அதன் உரிமையாளர்கள் நீச்சல் மற்றும் நடைபயிற்சி அளித்து வரு கின்றனர். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு இன்னும்  சில தினங்களே உள்ளது. பொங்கல் திருவிழாவை முன் னிட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக் கட்டு, குதிரை ரேக்ளா உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டிகளுக்காக ஜல்லிக்கட்டு காளைகள், குதிரைகளை தற்போது வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுத்தி வரு கின்றனர். அதன்ஒருபகுதியாக சேலம் மாவட்டம், ஆத்தூர் உடையார்பாளையம் நண்பர்கள் குழு சார்பில், 34 ஆண்டு களாக குதிரை வண்டி ஓட்டப்பந்தயம் (ரேக்ளா போட்டி) உடையார்பாளையத்தில் தொடங்கி கொத்தாம்பாடி வரை  நடைபெறுவது வழக்கம். இப்போட்டியில் சிறிய குதிரைக் கான போட்டியில் 10 கி.மீ தூரம் போட்டி எல்லையாகவும்,  மற்றும் பெரிய குதிரைக்கான போட்டியில் 15 கி.மீ தூரம் எல்லைக்கோடாக நிர்ணக்கப்பட்டு நடைபெறும். இதில் கலந்து கொள்வதற்காக ஆத்தூர், திருச்சி, புதுக்கோட்டை, சேலம், நாச்சியார் கோவில், குமாரப்பாளையம் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து குதிரைகள் கலந்து கொள்வது வழக்கம். இப்போட்டிக்காக குதிரை வீரர் கள் தங்களது குதிரைகளை 48 நாட்களுக்கான பயிற்சி ஈடு பட்டுள்ளனர். ஆத்தூர் பகுதியில் 20க்கும் மேற்பட்ட குதிரை கள் தற்போது நீச்சல் பயிற்சி, சுத்து பயிற்சி, ஓட்ட பயிற்சி,  நடைபயிற்சி உள்ளிட்ட பல்வேறு வகையான பயிற்சிகளும், சத்து மிகுந்த உணவு வகைகளும் கொடுக்கப்பட்டு வரு கின்றன.