districts

img

பொங்கல் விழா: இரு சமூகத்தினரிடையே தகராறு

தருமபுரி, ஜன.18- பாப்பாரப்பட்டி அருகே கோவிலில் பொங்கல் வைப்பதில்  இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அங்கு  போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ளது  பனைக்குளம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள காட்டமராஜா  கோவிலில் இரு சமூகத்தினர் காணும் பொங்கல் அன்று பொங்கல் வைப்பது வழக்கம். இந்நிலையில், செவ்வாயன்று ஒரு சமூகத்தினர் கோவி லில் பொங்கல் வைத்துள்ளனர். அப்போது அங்கு வந்த மற்றொரு சமூகத்தினர், நாங்கள் வருவதற்கு முன்பே எப்படி  பொங்கலிடலாம்? என கேட்டனர். இதனால் இரு சமூகத்தி னரிடம் வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியது. மேலும். இரு சமூகத்தை சேர்ந்தவர்களும் கோவில்  வளாகத்தில் குவிந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல்  ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஜெயக்குமார் தலை மையில் பாப்பாரப்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று இரு சமூகத்தினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால்.  பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதை யடுத்து. போலீசார் பொங்கல் விழாவை நிறுத்தினர். இதனிடையே பனைக்குளம் கிராமத்தில் அசம் பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர்.