திருப்பூர், ஜன.17- வேலம்பாளையம் நகரத்தில் தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பொங்கல் வைத்து கொண்டாடினர். பொங்கல் திருநாளான ஞாயிறன்று வேலம்பாளையத் தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கக்கிளைகளின் சார்பாக பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாதர் சங்க நகரத் தலை வர் வே.அழகு தலைமை வகித்தார். இதில், பெண்கள் சேர்ந்து கும்மியடித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். இதில் இந்தி பேசும் பெண்களும் கலந்து கொண்டனர். நிறைவாக, பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கி, வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்க ராஜ், மாதர் சங்க நகரச் செயலாளர் ர.கவிதா, சிபிஎம் நகரச் செயலாளர் ச.நந்தகோபால், நகரக் குழு உறுப்பினர் த.நாகரா ஜன், மூத்த தலைவர் வி.பி.சுப்பிரமணியம், சிபிஎம் கிளைச் செயலாளர்கள் வி.வெள்ளிங்கிரி, வி.ஆர்.சரவணகுமார், சி. வசந்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சமத்துவ பொங்கல் விழாக்கள்
திருப்பூர் மாநகராட்சி, 11 ஆவது வார்டுக்குட்பட்ட தில கர் நகர் பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. மாதர் சங்கத்தின் வேலம்பாளையம் நகரப் பொருளாளர் சாந்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிஐடியு பனியன் சங்க வேலம்பாளையம் பகுதிக்குழு செயலாளர் பி.சின்னச் சாமி, பாத்திரத் தொழிலாளர் சங்க செயலாளர் கே.குப்பு சாமி, நிர்வாகி கலாதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். 14 ஆவது வார்டு, பெரியார் காலனி பகுதியில் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. மாதர் சங்கத்தின் வேலம்பா ளையம் நகரச் செயலாளர் ர.கவிதா தலைமையில் நடந்த விழாவில், சிபிஎம் நகரக்குழு உறுப்பினர்கள் ஆர்.சுகுமார், பி.பாபு, கிளைச் செயலாளர் த.இந்திராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அனுப்பர்பாளையம் பாத்திர சங்க அலுவலகம் முன்பு பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.