districts

வாக்கு சாவடிகள் பிரிப்பு திருப்பூரில் ஆலோசனை கூட்டம்

திருப்பூர், செப்.21- திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தலைமையில், திருப்பூர் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் செவ்வாயன்று ஆயிரத்து 500 வாக்காளர்களுக்கும் அதிக மாக உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்தல் தொடர்பான அங் கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 240 வாக்குச் சாவடிகளில் ஆயிரத்து 500 வாக்காளர்கள் உள்ள இரண்டு வாக்குச்சாவடிகளை பிரித்து 242ஆக மாற்றும் நடவடிக்கை கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், உதவி ஆணையர்கள் வாசுகுமார், சுப்பிரமணியன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

;