districts

சோழபுரம் அனைத்து வணிகர்  நலச் சங்கம் ஆலோசனை கூட்டம்  

கும்பகோணம், மார்ச் 20 - தஞ்சை மாவட்டம் சோழபுரம் அனைத்து வணிகர் நலச் சங்கம் சார்பில்  ஆலோசனை கூட்டம் வணிகர் சங்க தலைவர் முகமது சுகைல் தலைமை யில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சோழபுரம் அனைத்து வணிகர் சங்கத்தின் ஆண்டு  வரவு-செலவு அறிக்கை அறிவிக்கப்பட்டது. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வும் குற்ற நடவடிக்கையை தடுப்பதற்கும் சோழபுரத்தில் வனிகர் சங்கம் சார்பில் சிசிடிவி பொருத்தியதற்கு பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது. மே 5 ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் 39 ஆவது வணிகர் தின தமிழக வணி கர் விடியல் மாநாட்டிற்கு சோழபுரம் பகுதியிலிருந்து பெருந்திரளாக கலந்து  கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

;