டாக்டர் அம்பேத்கரின் 131 வது பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனையில் டாக்டர் அம்பேத்கார் இரத்தவங்கி குழுவின் இரண்டாமாண்டு ரத்ததான முகாம் வியாழனன்று நடைபெற்றது .
இம்முகாமிற்கு அம்பேத்கர் ரத்தவங்கியின் ஒருங்கிணைப்பாளர்கள், தமிழ்நாடு அரசு மின் ஊழியர் ராஜேந்திரன் மற்றும் 108 அவசர வாகன ஊர்தி ஓட்டுநர் சரவணன் ஆகியோர் தலைமையில் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்றது.
இந்த முகாமில் சாதி, மத வேறுபாடின்றி தன்னெழுச்சியாக 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்த தானம் வழங்கினர்.
இதில், தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டு இரத்த கொடை வழங்கினர். மருத்துவமனையின் சார்பாக டாக்டர் அம்பேத்கர் ரத்த வங்கி குழுவிற்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நீதிமன்றத்தில் இந்தியாவின் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் முழு உருவச்சிலை அமைக்க வேண்டுமென அம்பேத்கர் இரத்த வங்கி ஒருங்கிணைப்புக்குழு சார்பில் தமிழக அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.