districts

img

பொள்ளாச்சி: இலக்கிய சந்திப்பு - நூல் அறிமுக விழா

பொள்ளாச்சி, டிச. 23-  தீ இனிது இலக்கிய சந்திப்பு மற்றும்  கருக்கல் திரைப்பட இயக்கம் இணைந்து நடத்திய நூல் அறிமுகம் மற்றும் விருது  வழங்கும் விழா ஞாயிறன்று பொள்ளாச்சி வங்கி ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற் றது. இந்நிகழ்விற்கு  தமிழர் அவையத்தின் பொதுச் செயலாளர் செ.இளங்கோவன் தலைமை வகித்தார்.பொள்ளாச்சி தமுஎகச செயலாளர் சூரியபிரகாஷ் வரவேற்றார். கவிஞர் தாய்நதி எழு திய ‘நடுகல்லாற்றுப்படை’ எனும் கவிதை தொகுப்பு நூலினை கவிஞர் இளஞ்சேரல் அறிமுகம் செய்து உரை யாற்றினார்.இதனைத்தொடர்ந்து தமிழ்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் வே.பாரதி மற்றும் கருக் கல் திரைப்பட இயக்கத்தின் ஒருங்கி ணைப்பாளர் சுரேஷ்வரன்  சிறப்பித்து பேசினர்  .  பின்னர், பொள்ளாச்சி கள்ளிப்பாளை யம் புதூரிலுள்ள தாய்த்தமிழ் தொடக் கப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கவிதை மற்றும் பாடல் கலை நிகழ்ச்சி நடை பெற்றது.  இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு இளம் கவிஞர் ர,மோனிகா பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள்  வழங்கி னார்.இதன்பின்னர், கும்பகோணம் தாழ்வாரம் இலக்கிய சந்திப்பின் ஒருங்கிணைப்பாளர் பாரதிமோகன்  இளம் கவிஞர் ர.மோனிகாவிற்கு ‘போர்க்குரல்’ விருது வழங்கி கவுரவித்தார். நிறை வாக‘நடுகல்லாற்றுப்படை’ கவிதை’ தொகுப்பிற்கு கவிஞர் தாய்நதி ஏற்புரை யாற்றினார். இறுதியில், தீ இனிது இலக்கிய இயக்கத் தின் ஒருங்கிணைப்பாளர் சோழநிலா நன்றி தெரிவித்தார்.இதில், நிவே திதா மற்றும் முருகானந்தம், சிறிநான் மணிகண்டன், தாய்த்தமிழ்ப்பள்ளி ஆசி ரியர்கள், பள்ளி மாணவர்கள் என ஏராளமா னோர் கலந்துக்கொண்டனர்.