பொள்ளாச்சி, ஜன.20- பொள்ளாச்சி ஜூப்ளி கிணறு வீதியில் கட்டப்பட்ட பல் நோக்கு மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட ஜூப்ளி கிணறு வீதியில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பி னர் ஜெயராமன் தொகுதி மேம்பாடு நிதியின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மையம் கட்டப்பட்டது. ஆனால், தற்போது வரை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் காட்சிப் பொருளாகவே காணப்படு கிறது. எனவே, உடனடியாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.