districts

img

வாக்கு எண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

சேலம், பிப்.20- சேலத்தில் அரசியல் கட்சி பிர முகவர்களின் முன்னிலையில் வாக்குப்பதிவு இந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டு, அறைக்கு துப் பாக்கி ஏந்திய  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் 709  வாக்குச்சாவடிகளில் பயன்படுத் தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேலம் அம்மா பேட்டை சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப் பட்டது. ஆத்தூர் நகராட்சியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி யிலும், நரசிங்கபுரம் நகராட்சியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் நரசிங்கபுரம் மாந கரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியிலும், மேட்டூர் நகராட்சி பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், மாதையன் குட்டை எம்.ஏ.எம் மேல்நிலைப்பள்ளி யிலும் வைக்கப்பட்டன. இதேபோல், எடப்பாடி நக ராட்சியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், எடப்பாடி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியிலும், இடங்கண சாலை நகராட்சியில் பயன்படுத்தப் பட்ட வாக்குப்பதிவு இயந்திரங் கள், பெருமாகவுண்டம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியி லும், தாரமங்கலம் நகராட்சியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், செங்குந்தர் மகா ஜன் மேல்நிலைப்பள்ளியிலும் வைக்கப்பட்டன.

இதேபோல் 31  பேரூராட்சிகளிலும் பயன்படுத்தப் பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த பேரூராட்சிகளில் ஒதுக் கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டன. அங்கு அரசியல் கட்சியினர் முன் னிலையில் மின்னணு வாக் குப்பதிவு இயந்திரங்கள் கொண்ட  பெட்டிகள் வரிசையாக வைக்கப் பட்டு அந்த அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. பலத்த பாதுகாப்பு இதில், 16 வாக்கு எண்ணும் மையங்களிலும் கண்காணிப்பு  கேமராக்கள் பொருத்தப்பட்டுள் ளது. இதனை மாவட்ட தேர்தல் பார்வையாளர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். மேலும், மாவட்ட ஆட் சியர் செ.கார்மேகம் தேர்தல் கட் டுப்பாட்டு அறையிலிருந்தும், மாந கராட்சி ஆணையாளர் கிறிஸ்து ராஜ் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாடு அறை யில் இருந்தும் கண்காணித்து வரு கின்றனர். வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சுழற்சி முறையில் 1300  காவலர்கள், 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட் டுள்ளனர். இதுதவிர சார் ஆட்சியர் உள்ளிட்ட அரசுத்துறை அலுவ லர்கள், பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்ற னர்.