அக்னிபாத் திட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு ஈரோடு ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு
ஈரோடு, ஜூன் 21- அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த கூடும் என்கிற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு ரயில் நிலையத்தில் காவல் துறையினர் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய ராணுவத்துக்கு காண்டிராக்ட் முறையில் ஆள் சேர்க்கும் அக்னிபாத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியு ள்்ளது. வட மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்களில் ரயில்களுக்கு தீவைப்பு சம்பவங்கள் நடைபெறுகிறது. இளைஞர்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல் வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதைய டுத்து ரயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது. ஈரோடு ரயில் நிலையத்தில் போலீஸ் பாது காப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடு பட்டு வருகின்றனர். இளைஞர்கள் கூட்டமாக சென்றால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி உடமைகளை பரிசோ தித்து விசாரணை நடத்துகின்றனர். முன்னெச்சரிக்கை நடவ டிக்கையாக இந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், ரயில் நிலையத்திற்குள்ளும் ரயில்வே போலீ சார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு ரயில்களையும் பெட்டி பெட்டியாக சென்று சோதனை செய்து வருகின்றனர்.
கஞ்சா கடத்திய இருவர் கைது - 200 கிலோ கஞ்சா பறிமுதல்
சேலம், ஜுன் 21- சேலத்தில் லாரி மூலம் 200 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆந்திராவில் இருந்து கஞ்சா மூட்டைகளை சேலம் வழி யாக செல்லும் ரயில்களில் கடத்தி வரும் நபர்களை, சேலம் ரயில் நிலைய காவல்துறையினர் கண்காணித்து கைது செய்து வருகின்றனர். இதனால், கஞ்சா கடத்தும் நபர்கள் லாரி மற்றும் வேன்களில் கஞ்சா கடத்த தொடங்கினர். இதனை அறிந்த காவல்துறையினர், சேலம் புறவழி சாலைக ளில் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்ற னர். அதன் ஒரு பகுதியாக, சேலம் ஏற்காடு குப்பனூர் பகுதி யில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையி னர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ் வழியே வேகமாக வந்த லாரியை நிறுத்த முற்படும் போது, லாரி நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் லாரியை துரத்திச்சென்று மடக்கி பிடித்து சோதனை செய்ததில், 200 கிலோ கஞ்சா மூட்டைகள் லாரி யில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த லாரியை ஒட்டி வந்த திருச்சி முசி றியை சேர்ந்த முருகன் மற்றும் சேலம் கருமந்துறை பகு தியை சேர்ந்த மகேஸ்வரன் ஆகிய இருவரையும் காவல் துறையினர், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியை பறி முதல் செய்தனர். மேலும், இது குறித்து போதை பொருள் தடுப்பு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
வாலிபர் சங்க கிளை மாநாடுகள்
நாமக்கல், ஜூன் 21- நாமக்கல் மாவட்டத்தில் திங்களன்று இந்திய ஐனநாயக வாலிபர் சங்கம் சார்பில், பல்வேறு இடங்களில் கிளை மாநா டுகள் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திருச்செங்கோடு ஒன்றியம், மோடமங்கலம் கிளை மாநாடு திங்களன்று தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், ஒன்றிய தலைவர் ஜி.கோபி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி னர். பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில், தலைவராக நந்தகுமார், செயலாளர் தமிழ்ச்செல்வன், பொருளாளர் யுவராஜ், துணைத் தலைவர் குணசேகரன், துணைச் செயலாளர் சரத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர். திருச்செங்கோடு ஒன்றியம், நல்லா கவுண்டம்பாளை யம் கிளை மாநாடு ம.பிரகாஷ் தலைமையில் நடைபெற் றது. இதில், மாவட்ட தலைவர் இ.கோவிந்தராஜ், திருச்செங் கோடு கமிட்டி தலைவர் ஜி.கோபி கலந்துகொண்டனர். பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில், புதிய கிளைத் தலைவராக ம.பிரகாஷ், புதிய கிளைச் செய லாளராக ஆ.ஜீவா, பொருளாளர் ப.விக்னேஷ், துணைத் தலைவர் மு.ரோஹித், துணைச் செயலாளர் ப.மனோஜ் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மின்தடை அறிவிப்பு
இளம்பிள்ளை, ஜுன் 21- சேலம் மாவட்டம், வேம் படிதாளம் துணை மின் நிலை யத்திற்கு உட்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ள தால், இளம்பிள்ளை நகர், காந்தி நகர், தப்பக்குட்டை, சித்தர் கோயில், இடங்கண சாலை நகர், கே.கே.நகர், கல் பாரப்பட்டி, வேம்படிதாளம், காக்காபாளையம், மகுடஞ் சாவடி, சீரகாபாடி, பொதி யன் காடு, மலங்காடு, கோத் துப்பாலிக்காடு, அரியாம்பா னையம் உள்ளிட்ட பகுதிக ளிலும் புதனன்று (ஜூன் 22) காலை 9 மணி முதல், மதியம் 2 மணி வரை மின் வினியோ கம் இருக்காது என தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், சேலம் தெற்கு செயற்பொறியாளர் இரவிராஜன் தெரிவித்துள் ளார்.
கிறிஸ்துவ பெண் உடலை எடுத்து செல்ல அனுமதி மறுப்பு
அவிநாசி, ஜூன் 21- திங்களன்று சேவூர் அருகே இறந்த கிறிஸ்துவப் பெண் உடலை வழக்கமான வழித்தடத்தில் எடுத்துச் செல்ல மறுத்த தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சேவூர் அருகே லூர்துபுரத்தில் ஏராளமான கிறிஸ்துவர் கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், திங்களன்று கிறிஸ் தவ மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, வழக்கமான வழித்தடத்தில் உடலை எடுத்துச் செல்ல முயன் றனர். அப்போது தனிநபர்கள் சிலர் தங்களுக்குச் சொந்த மான இடத்தில் உயிரிழந்தவர்களின் உடலை எடுத்துச் செல் லக் கூடாது எனக் கூறி தடுப்புகள் வைத்து மறைத்தனர். தகவ லறிந்து சம்பவயிடத்திற்கு வந்த சேவூர் காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் பேச்சுவார்த் தைக்குப் பிறகு இரவு 8.30 மணிக்கு வழக்கமாகச் செல்லும் வழித் தடத்தில் உடலை எடுத்துச் சென்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், பல ஆண்டுகளாக கல்லறை யில் அடக்கம் செய்ய அரை கிலோ மீட்டர் தொலைவில் செல் லக் கூடிய இதே வழித்தடத்தில் தான் சென்று வருகிறோம். இதை விட்டு, மாற்றுத் தடத்தில் சென்றால், 4 கிலோ மீட்டர் தொலைவு சென்று தான் அடக்கம் செய்ய முடியும். ஆனால் தற்போது வழக்கமான வழியில் செல்லக் கூடாது எனத் தடுக் கின்றனர். மேலும், இது போன்ற சம்பவங்கள் நடக்காமலி ருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் 10 ஆவது தலைமை மகாசபை
திருப்பூர் ஜூன் 21- திருப்பூர் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் 10ஆவது தலைமை மகாசபை திங்களன்று இடுவாய் கிராமத் தில் தியாகி ரத்தினசாமி நினைவகத்தில் நடைபெற்றது. மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மகாசபை சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.வேலுச்சாமி தலைமை யில் நடைபெற்றது. சங்க கொடியை மாவட்ட செயலாளர் கே. பத்மநாபன் ஏற்றி வைத்தார். மாவட்டச் செயலாளர் கே. குமரவேல் வரவேற்றார். சிஐடியு திருப்பூர் மாவட் டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் துவக்கி வைத்துப் பேசினார். மாவட்ட பொதுச்செயலாளர் பி.முத்துசாமி வேலையறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் கே.முருகே சன் வரவு செலவு அறிக்கை முன்வைத்தார். இதைதொடர்ந்து இடுவாய் ஊராட்சிமன்றத் தலைவர் கே.கணேசன் வாழ்த்திப் பேசினார். இப்பேரவையை நிறைவு செய்து வைத்து கே.காமராஜ் உரையாற்றினார். கே. பழனிச்சாமி, பி.சாமியப்பன், ராஜா, குப்புசாமி, முத்து சாமி, ஆர்.பழனிச்சாமி, வடிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். இந்த பேரவையில் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.வேலுச்சாமி, பொதுச்செயலாளர்: பி.முத்துசாமி, பொரு ளாளர்: கே.முருகன், மாவட்ட துணை தலைவர்கள்: வி. மோகனசுந்தரம், பி.சாமியப்பன், துரைசாமி, மாவட்ட செய லாளர்கள்: கே.குமரவேல், ஆர்.பழனிச்சாமி, குப்புசாமி உட் பட 25 பேர் தேர்வு செய்யப்பட்டனர். விசைத்தறி தொழிலாளர்களுக்கான நிறுத்தி வைக் கப்பட்டுள்ள குழு காப்பீட்டு திட்டத்தை மீண்டும் துவக்க வேண்டும்,நூல் விலையை குறைத்து விசைத்தறி தொழி லையும், விசைத்தறி தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும், விசைத்தறி தொழிலாளர்களுக்கும் 12 மணி நேர வேலையை 8 மணி நேரமாக மாற்றி குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.26,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.
சிஐடியு திருப்பூர் மாவட்ட மாநாடு வரவேற்புக்குழு அமைப்பு
அவிநாசி, ஜூன் 21- அவிநாசி பிராமமூர்த்தி நினைவகத்தில் திங்களன்று சிஐடியு திருப்பூர் மாவட்ட மாநாடு தயாரிப்பு வரவேற்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது . இந்திய தொழிற்சங்க மையம் அவிநாசி ஒன்றி யத்தில், ஆகஸ்ட் 14, 15, ஆகிய தேதிகளில் தொழிலாளர் கள் கோரிக்கையை முன்வைத்து முதல் நாள் பேரணி யுடன் மாநாடு துவங்குவதாகவும் மற்றும் இரண்டாம் நாள் பிரதிநிதிகள் உடன் மாநாடு நடைபெற உள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது. இம்மாநாட்டின் வரவேற்புக் குழு தலைவ ராக பி. முத்துசாமி, செயலாளராக ஏ. ஈஸ்வரமூர்த்தி, பொரு ளாளராக ஏ. ராஜன், துணை நிர்வாகிகளாக சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் துணைச் சங்கத்தினர் தேர்வு செய்யப்பட் டுள்ளனர். இந்த வரவேற்பு குழுக் கூட்டத்தில், சிஐடியு நிர் வாகிகள் முத்துசாமி, உன்னி கிருஷ்ணன், மூர்த்தி, சம்பத், ராஜகோபால், மற்றும் பாலன் பாக்கியலட்சுமி,கணேசன், குப்புசாமி, கந்தசாமி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆழியாறு - ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டம்: விவசாயிகளுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை
திருப்பூர், ஜூன் 21- ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத் திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல் லும் திட்டம் குறித்து தமிழக அமைச் சர் சாமிநாதன் தலைமையில் பரம்பிக் குளம் - ஆழியாறு பாசன திட்ட விவ சாயிகளுடன் பேச்சுவார்த்தை நடை பெற்றது. பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் சுமார் 4.25 லட்சம் ஏக் கர் விவசாய நிலம் நீர்ப் பாசனம் பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி 4 நகராட் சிகள், 12 பேரூராட்சிகள் 400க்கும் மேற் பட்ட கிராமங்களின் குடிநீர் ஆதார மாக இந்த பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் விளங்கிவருகிறது. இந்த நிலையில் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தொலை வில் உள்ள ஒட்டன்சத்திரம் பகுதிக்குத் தண்ணீரைக் கொண்டு செல்ல தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள் ளது. ஏற்கனவே ஒட்டன்சத்திரம் பகு திக்கு காவிரி ஆற்றிலிருந்து இரண்டு திட்டங்களும், பாலாறு, பொருந்த லாறு ஆகிய அணைகளில் இருந்து 2 திட்டங்கள் என 4 குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் சூழலில், ஆழியாறு பாசன திட்டத்திலிருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல கூடாது என பரம் பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட விவ சாயிகள் ஆட்சேபம் தெரிவித்து வரு கின்றனர். ஆனால் ஆழியாறு ஆற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. எனவே அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வரும் 27ஆம் தேதி பொள்ளாச்சியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த விவ சாயிகள் முடிவு செய்து இருந்தனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் விவசாயிகளுடன் செய்தித்துறை அமைச்சர் சாமிநா தன் செவ்வாயன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் அரசின் நீர்வளத் துறை நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முன்னிலையில் கலந் தாய்வு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதாகவும், அதில் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்க ளது கருத்துக்களை தெரிவிக்க வேண் டும், அதுவரை போராட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என கேட்டுக் கொண் டார்.
பள்ளபாளையத்தில் பெண்களை ஏற்றாமல் செல்லும் பேருந்துகள்
திருப்பூர், ஜூன் 21- தமிழக அரசாங்கம் அரசு பேருந்தில் பயணிக்கும் பெண் களுக்கு இலவசம் என்று அறிவிப்பு செய்திருக்கின்றது. இந்த சூழ்நிலையில் செவ்வாயன்று காலை 6.30 மணிக்கு பள்ளபாளையம் பேருந்து நிலையத்தில் மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி புரிந்து வரும் 50க்கும் மேற் பட்ட பெண்கள் வேலைக்குச் செல்வதற்கு பேருந்து நிலை யத்தில் காத்திருந்தனர். அப்பொழுது அங்கு வந்த பேருந்து நிற்காமல் சென்று உள்ளது. பேருந்து எண் 23 மாற்று பேருந்து, உடுமலையிலிருந்து அமராவதி செல் லும் 10 நெம்பர் பேருந்து ஆகியவை நிறுத்தப்படாமல் சென்று விட்டன. இதுபோன்று தொடர்ந்து நடந்து கொள்ளக் கூடிய சூழ்நிலை என்பது பள்ளபாளையம் பகுதியில் தொடர்கி றது. எனவே போக்குவரத்து அதிகாரிகள் உரிய விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொது மக்கள் சார்பாக மார்க்சிஸ்ட் கட்சியினர் கேட்டுக் கொண்டுள் ளனர்.
பால் கொள்முதல் விலை உயர்வு? அமைச்சர் சா.மு.நாசர் தகவல்
உதகை, ஜூன் 21- பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவது குறித்து தமிழக முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வரு கிறார் என மாநில பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம், எல்லநல்லி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், வட்டார போக்குவரத்து அலுவலகம் எதி ரில் உள்ள ஆவின் பால் பண்ணை, பிங்கர் போஸ்ட் பகுதி யில் கருவூல ஜெர்சி பொலிகாளை பண்ணை ஆகியவற்றை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன்பின் அவர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில், சீரழிந்து கிடக்கும் ஆவின் நிறுவனத்தை நிலை நிறுத்தி, அதனை மேலும் வளம் பெற செய்ய வேண்டும் என்பதற்காகவும், ஆவின் நிறுனங்களில் பால் உற்பத்தி செய்வது, உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்து வது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமி ழகத்தில் ஆவின் நிறுவனம் சார்பில் வியாபார நோக்கமின்றி, கொள்முதல் செய்யப்படும் பால், அப்படியே பதப்படுத்தப் பட்டு மீண்டும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. சுவை யூட்டுவதற்காக எந்தவொரு ரசாயனமும் கலப்படம் செய் யப்படுவதில்லை. கடந்த 10 ஆண்டுகளில் 32 லட்சம் லிட்டர் பால் கொள் முதல் செய்யப்பட்டது. தற்போது, நாளொன்றுக்கு 43 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆவின் பால் விலையில் ரூ.3 குறைக்கப்பட்டதால், நாள் ஒன்றுக்கு தற் போது 29 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வரு கிறது. பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கு வது குறித்து தமிழக முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். விரைவில் ஆவின் நிறுவனம் நவீனமயமாக்கப் படும், என்றார். மேலும், ஹெல்த் மிக்சில் எந்த முறைகேடும் இல்லை. பாஜக தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக பணி யாற்றி இருந்தாலும், பொது அறிவு அவருக்கு இல்லை. அவர் எப்படி காவல்துறை அதிகாரியாக பணியாற்றினார் என்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது, என்றார். முன்னதாக, இந்த ஆய்வின்போது, வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்தி ரன், ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன், மாவட்ட ஆட்சியர் அம்ரித், ஆவின் பொதுமேலாளர் வெங்கடாசலம், குன்னூர் உதவி ஆட்சியர் தீபனா விஷ்வேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அரசு கல்லூரியின் புதிய கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை
பொள்ளாச்சி, ஜுன் 21- மாணவர்களின் நலன் கருதி பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டிடத்தை பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் அரசு கலைக்கல் லூரி வேண்டுமென பல ஆண்டுகளாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொது மக்களுடன் இணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழக அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் அரசு கலைக்கல்லூரி தொடங்குவதற்கான உத்தரவினை பிறப்பித்தது. இதன் பின் மகாலிங்கபுரத்தில் உள்ள சமத்தூர் ராம ஐயங்கார் நகரமன்ற மேல்நிலைப்பள்ளியில் ஒரு பகுதி கட்டிடத்தில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. இதில், பிகாம், சிஏ, பி,காம், பிஏ, மற்றும் பிஎஸ்சி, பிபிஏ உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் 900க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயின்று வரு கின்றனர். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு சமத்தூர் ராம ஐயங்கார் நகரமன்ற மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கல்லூ ரிக்கு என 4 ஏக்கர் பரப்பளவு நிலம் ஒதுக்கப்பட்டு, ரூ.8 கோடியே 95 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய கட்டி டம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம், மூன்று தளங்களுடன் 36 அறைகள் கொண்டு கட்டி முடிக்கப்பட்டது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக புதிய கல் லூரி திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் 2022 - 2023 கல்வி ஆண்டிற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் (புதன்கிழமை) இணையதளத்தில் வெளியிடப்படும் என தமி ழக அரசு தெரிவித்துள்ளது. ஒருமாத கால இடைவெளிக் குள் தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது. எனவே, பொள்ளாச்சி அரசு கலைக்கல்லூரி மாணவர்க ளுக்கான கலந்தாய்வு மற்றும் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான கல்லூரி வகுப்புகள் தொடங் கும் விதத்தில் உடனடியாக புதிய கட்டிடத்தை மாணவர் களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நடப்பு கல்வி யாண்டு முதல் முதுநிலை வகுப்புகள் தொடங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு
உதகை, ஜூன் 21- சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நீலகிரி மாவட் டத்தில் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் செவ்வாயன்று பள்ளிகள், அரசு அலு வலகங்கள் உட்பட பல இடங்களில் யோகா தினம் கொண்டா டப்பட்டது. உதகையில் உள்ள அரசு உதவி பெறும் சாந்தி விஜய் பள்ளியில் மாணவிகள் யோகா செய்து அசத்தினர். மேலும், நடனமாடி யோகா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத் தினர். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், யோகா உட லுக்கு மட்டுமல்ல மனதுக்கும் நன்மை அளிக்கும். அனைத்து வயதினரும் யோகா கற்றுக்கொள்ளலாம், என்றனர். இதில், பள்ளி தாளாளர் மோதிலால் கட்டாரியா தலைமை ஆசிரியர் பத்மா உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, உடற் பயிற்சி ஆசிரியைகள் சீலாதேவி, ராஜேஸ்வரி ஆகியோர் மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளித்தனர். இதேபோல் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள நீதிமன்றத்தில் யோகா தினம் கொண்டா டப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட நீதிபதி முருகன் தலைமை வகித்தார். இதில், நீதிபதிகள் ஸ்ரீதரன், ஸ்ரீதர், மோகனகிருஷ்ணன் தமிழினியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரி வளா கத்தில் உள்ள ஏகலைவா அரங்கத்தில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. ராணுவ பயிற்சிக்கல்லூரி கர்னல் திருப்பாதி தலைமையில் 350 ராணுவ அதிகாரிகள் தங்க ளது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு பல்வேறு யோகா பயிற்சிகளை செய்தனர்.
ஜூன் 24ல் வேளாண் குறைதீர்க்கும் கூட்டம்
ஈரோடு, ஜூன் 21- ஈரோடு மாவட்டத்தில் வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 24 ஆம் தேதியன்று நடைபெற உள் ளது என தெரிவிக்கப்பட் டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டு ஜுன் மாதத் திற்கான வேளாண் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங் கில் வரும் ஜூன் 24 ஆம் தேதி யன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. அன் றைய தினம் 11.30 வரை மனுக்கள் பெறப்படும். 11.30 மணி முதல் 12.30 மணி வரை விவசாய சங்கப் பிரதிநிதி கள் விவசாயம் தொடர்பான தங்களது பகுதி பிரச்சனை கள் குறித்து கருத்துக்கள் தெரிவிக்கலாம். மேலும், பிற்பகல் 12.30 முதல் 1.30 வரை அலுவலர் களின் விளக்கங்களும் தெரி விக்கப்படவுள்ளது. இக்கூட் டத்தில் விவசாய பெருமக் கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சி யர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.