கோவை, ஜூன் 17- சூலூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடு பட்ட 3 பேரை காவல் துறை யினர் கைது செய்தனர். கோவை மாவட்டம், சூலூர் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடந்து வருவ தாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சூலூர் காவல் ஆய்வாளர் மாதையன் தலைமையி லான தனிப்படை காவல் துறையினர், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சத்யராஜ் என்ற கஞ்சா வியாபாரியை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், திருச்சியைச் சேர்ந்த கார்த்திக்கி டம், சத்யராஜ் கஞ்சா வாங்கியது தெரியவந்தது. அடுத்த டுத்த விசாரணையில் பாபி கான் என்ற வடமாநில கஞ்சா வியாபாரியும் பிடிபட்டார். இவர்களிடமிருந்து மூன்று கிலோ கஞ்சா பொட்டலங்கள், இரு சக்கர வாகனம் ஒன்றையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், இவர்கள் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனைய டுத்து மூன்று பேரையும் போலீசார் கைது செய்து சிறை யில் அடைத்தனர்.