districts

எடப்பாடி பழனிசாமி மீது காவல் நிலையத்தில் புகார்

சேலம், மே 22-

    ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவா ளர் புகழேந்தி மீது தாக்குதல் நடத்திய தாக அதிமுக பொதுச்செயலாளர் எடப் பாடி பழனிசாமி உட்பட 30 பேர் மீது  நடவடிக்கை எடுக்கக்கோரி எடப்பாடி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட் டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப் பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட் டுள்ள நிலையில், நான்தான் ஒரிஜினல் அதிமுக என கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் திருச்சியில் மாநாடு நடத்தினார்.

   அதனைத்தொ டர்ந்து மேற்கு மண்டல அளவிலான ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில், சனியன்று கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள் ளிட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உடனான ஆலோச னைக்கூட்டம் நடைபெற்றது.

    இதற்காக எடப்பாடி பழனிசாமியின் சொந்த  தொகுதியான எடப்பாடி சட்டமன்ற தொகுதியிலேயே ஓ.பன்னீர்செல்வத் தின் அணியின் ஆலோசனைக்கூட்டம் நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. இதில், பங்கேற்பதற் காக ஓ.பன்னீர்செல்வம் அணியின்  கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி வந்திருந்தார். அப்பொழுது எடப் பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள், புகழேந்தியின் காரை தாக்கி, தகாத வார்த்தைகளால் வசைபாடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.  இந்நிலையில், எடப்பாடி பகுதி யைச் சேர்ந்த ஓ.பன்னீர் செல்வம் அணி நிர்வாகி ராஜேந்திரன் என்பவர் எடப்பாடி காவல் நிலையத்தில் புகார ளித்துள்ளார்.

  அப்புகார் மனுவில், புக ழேந்தி காரை தாக்கிய சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஒன்றிய செயலாளர் முருகன்  உள்ளிட்ட 30 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள் ளார்.