districts

img

பி.கே.சுகுமாரன் 3 ஆம் ஆண்டு நினைவேந்தல்

கோவை, ஜன.13- சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கத்தின் ஸ்தாப தலைவர்களில் ஒருவரான பி.கே.சுகுமாரன் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திங்களன்று நடைபெற்றது.  கோவை மாவட்டத்தில் சிஐடியு ஆட்டோ சங்கத்தை உருவாக்கிய ஸ்தாபகத் தலைவரும், ஆட்டோ தொழிலாளர்களின் மரியாதைக்குரிய தலைவருமான பி.கே.சுகுமாரன் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, மேட்டுப்பாளையம் சாலையில், விபி சிந்தன் நினைவு ஆட்டோ ஸ்டாண்டில் திங்களன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, ஆட்டோ சங்க துணைத் தலைவர் கே.பழனியப்பன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.மனோகரன், செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுசாமி, சிஐடியு மாவட்ட ஆட்டோ சங்க பொதுச்செயலாளர் எம்.கே.முத்துக்குமார், ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் இரா செல்வம், பொருளாளர் எம்.மைக்கேல் சாமி, ஏ ரஃபி, எம்.எம்.ராஜன் உள்ளிட்ட திரளான ஆட்டோ தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.