ஈரோடு, அக்.25- அந்தியூர் பேருந்து நிலையம் அருகே கடைகள் முன்பு தோண்டப் படும் பள்ளங்களால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின் றனர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேருந்து நிலையம் பகுதியிலிருந்து அண்ணா மடுவு வரை இருபுறங்க ளிலும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி, சாலை விரி வாக்கம் பணி நடை பெற்று வருகின்றன. அந்தியூர் பகுதி யில் ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு விழா மற்றும் பண்டிகை காலங் களில் அதிகளவில் வியாபாரம் நடப்பது வழக்கம். இந்நிலையில், பேருந்து நிலையம் பகுதியில் மழை நீர் வடிகால் பணி அமைப்பதற்கு பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளன. தற்சமயம் பண்டிகை காலம் தொடங்கியுள்ளது. தற் போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் கடைகள் முன்பு பள்ளங் கள் தோண்டினால் அப்பகுதியில் கடை நடத்துபவர்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறுகின் றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு தற் போது இந்த தீபாவளி பண்டிகை வியாபாரம் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்த்து இருக்கும் நிலையில், கடைகள் முன்பு பள்ளங்கள் தோண் டப்பட்டு இருப்பதால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. பேருந்து நிலையம் பகுதி களில் கடைகளில் அதிக வாடகை கொடுத்து கடை வைத்து நடத்தி வரு கிறோம். பண்டிகை காலங்களில் நடக்கும் வியாபராத்தை நம்பி தான் இருக்கிறோம். தற்போது தீபாவளி நேரத்தில் வியாபாரம் நடைபெறாமல் இருந்தால் கடுமை யாக பாதிப்புக்குள்ளாவோம். மேலும், வாடகை கொடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்தியூர் பகுதியில் நடக்கும் பணி களை விரைவில் முடிக்க வேண்டும் என அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.