districts

img

பில்லூர் 3 ஆம் கட்ட பணிகள்- மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோவை, மார்ச் 14- பில்லூர் மூன்றாம் கட்ட பணி களை கோவை மாவட்ட ஆட்சியர்  கிராந்தி குமார் பாடி நேரில் ஆய்வு  மேற்கொண்டார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரி யத்தின் சார்பில் கோவை மாநக ராட்சியின் புதியதாக இணைக்கப் பட்ட பகுதிகளுக்கு,  ரூ.740 கோடி  மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகள் நடைபெற்று வரு கிறது. இப்பணிகளை ஆட்சியர்  நேரில் சென்று ஆய்வு மேற்கொண் டார். இந்த ஆய்வின்போது, தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் ஏ. செந்தில் குமார், மேற்பார்வை பொறியாளர்  ராஜி, நிர்வாக பொறி யாளர் செல்லமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆய்வு குறித்து ஆட்சியர்  கூறுகையில், கோவை மாநகராட்சி யுடன், குறிச்சி குனியமுத்தூர்  மற்றும் கவுண்டம்பாளையம்  ஆகிய நகராட்சி பகுதிகளும்,  7 பேரூராட்சிகளும், ஒரு ஊராட்சியும் இணைக்கப்பட்டு மாநகராட்சி விரிவு செய்யப் பட்டது. இவ்வாறு விரிவு செய்யப் பட்ட பகுதிகளுக்கு தேவையான குடிநீரை வழங்கும் பொருட்டு தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் பில்லூர் 3ஆம் குடிநீர்  திட்டம் அமைக்கப்பட்டு ரூ.740 கோடி செலவில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத் திட்டப் பணிகளானது நீரேற்று நிலையம், குழாய் அமைக்கும் பணி கள், சுத்திகரிப்பு நிலையம், சுரங்கப் பாதை அமைத்தல் என 3 பிரிவு களாக பிரித்து, பணிகள் நடை பெற்று வருகின்றன.  இத்திட்டத்தின்படி, கோவை  மாநகராட்சிக்கு உட்பட்ட மக்க ளுக்கு நாளொன்றுக்கு நபர்‌ ஒரு வருக்கு 135 லிட்டர்‌ வீதம் பயன் பெறும்‌ வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. தலைமை நீரேற்று  நிலையம்‌ பவானி ஆற்றை பில்லூர்  அணையின்‌ கீழ்புறம் நீராதார மாக கொண்டு செயல்படுத்தப் படுகிறது. இயல்பு நீருந்து குழாய்‌,  சுத்த நீருந்து குழாய்‌ மற்றும்‌ கிளை பிரதான நீருந்து குழாய்‌ என  மொத்தம்‌ 90.76 கி.மீ நீளத்திற்கு அமைக்க உத்தேசித்து, 41.17 கி.மீ  நீளத்திற்கு பணிகள்‌ முடிவுற் றுள்ளது. மீதமுள்ள பணிகள்‌ நடை பெற்று வருகின்றது. குழாய்கள்‌ அமைக்கும் பணிகள்‌ 47 சதவிகிதம்  முடிவுற்றுள்ளது. சுத்திகரிப்பு நிலைய பணிகள்‌ 178.30 எம்.எல்.டி  அளவுக்கு வடிவமைக்கப்பட்டு 93 சதவிகித பணிகள்‌ முடிவுற் றுள்ளது. மீதமுள்ள பணிகள்‌ நடைபெற்று வருகிறது.  சுரங்கப் பாதை வடிவமைப்பு மற்றும்‌ கட்டுமான பணிகள்‌ முடிவுற் றுள்ளது. குழாய்கள்‌அமைக்கவும்‌, பிரதான தரைமட்ட தொட்டி அமைக்கவும்‌ 156 ஏக்கர்‌ நிலம்‌  தேவைப்படுகிறது. இதில்‌ 35.50  ஏக்கர்‌ அரசு புறம்போக்கு நில மாகவும்‌, 121 ஏக்கர்‌ நிலம்‌ தனி யாருக்கு சொந்தமானது. நில  கையெடுப்பு பணிகள்‌ அனைத்தும்‌ முடித்து வெகு விரைவில் இத் திட்டம்‌ பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது, என்றார்.