தருமபுரி, ஜன.19- உடற்பயிற்சி கூட உரிமையாளரை கொலை செய்தவரை கைது செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி உறவினர்கள் தருமபுரி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், எட்டிமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (30). இவர் தருமபுரி, அமுதம் காலனி அருகே உடற் பயிற்சி கூடம் (ஜிம்) நடத்தி வந்தார். இதனிடையே, எட்டிமரத் துப்பட்டியில், சாலை மற்றும் சாக்கடை கால்வாய் அமைக்கப் பட்டது. இதனால் பிரகாசின் உறவினர் வெங்கடேசன் (42) என்பவருக்கும், பிரகாசுக்கும் வழித்தடம், சாக்கடை கால் வாய் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, வெங்க டேசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பிர காசை குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த பிரகாஷ் உயிரி ழந்த நிலையில், வெங்கடேசன் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து தகவலறிந்த தருமபுரி மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையிலான, மதிகோன் பாளையம் போலீசார் மற்றும் ஆயுதபடை போலீசார் எட்டி மரத்துப்பட்டிக்கு வந்தனர். இதன்பின் போலீசார், பிரகாஷின் உடலை மீட்டு, தருமபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, மருத்துமனை யில் குவிந்திருந்த பிரகாசின் உறவினர்கள், கொலை குற்ற வாளி வெங்கடேசன் மற்றும் இதற்கு காரணமானவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைய டுத்து, போலீசார், பிரகாசை கொலை செய்தவர்கள் மற்றும் அதற்கு துணை நின்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக் கப்படும் என உறுதியளித்தனர். அதன்பேரில் போராட்டக்கா ரர்கள் மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.